என் மலர்
நீங்கள் தேடியது "பாரம்பரிய அரிசி ரகங்கள்"
- இலுப்பை சம்பா கால் மற்றும் உடல் வலி நீங்க உதவுகிறது.
- தூயமல்லி அரிசி தோலின் சுருக்கம் போக்கும். உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது.
பெண்களுக்கு ஏற்படும் உடல்நலக்கோளாறுகளை சரிசெய்ய நமது பாரம்பரிய அரிசி ரகங்கள் கைகொடுக்கின்றன. இது தொடர்பாக சித்த மருத்துவ குறிப்புகளிலும் கூறப்பட்டுள்ளன. அதுபற்றிய தகவல்களை சித்தா டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
கருப்பு கவுனி: ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்பு இருக்கும் பெண்கள் இந்த அரிசி சாதத்தை சாப்பிட்டு வந்தால், நாளடைவில் நிவாரணம் கிடைக்கக்கூடும்.
பூங்கார் அரிசி: பெண்களுக்கு கருப்பை கட்டி உருவாகாமல் தடுக்க பெண் குழந்தைகள் பூப்பெய்திய காலத்தில் இருந்தே இந்த அரிசியை கொடுத்து வரலாம். மாதவிடாய் பிரச்சினையை சரிசெய்யும் ஆற்றலும் இதற்கு இருப்பதாக கூறுகிறார்கள். பிரசவத்துக்கு பின்பு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
பிசினி அரிசி: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் உடல் அலுப்பை குறைக்கவும், சுகப்பிரசவம் நடைபெறவும் இந்த அரிசி உதவும். மாதவிடாய் கோளாறுகளையும், இடுப்பு வலியையும் குணமாக்கும் பண்பு இந்தரக அரிசிக்கு உள்ளதாக கூறுகிறார்கள்.
குழியடிச்சான் அரிசி: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும்.
சூரக்குறுவை: பெண்களுக்கு ஹார்மோன் மாறுபாடு காரணமாக ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க இந்த அரிசி உதவுகிறது.
குடை வாழை அரிசி: குடல் சுத்தமாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என கூறுகிறார்கள்.
காட்டுயானம்: குழந்தைகள் செழுமையாக வளர உதவும்.
காலா நமக்: நரம்பு, ரத்தம் சார்ந்த நோய்கள் வரவிடாமல் தடுக்கும்.
அறுபதாம் குறுவை: எலும்புகள் பலமாக உதவும்
இலுப்பை சம்பா: கால் மற்றும் உடல் வலி நீங்க உதவுகிறது.
தங்க சம்பா: பல், இதயம் வலுவாகும்
நீலம் சம்பா: ரத்த சோகையை நீக்கும் பண்பு இதற்கு உள்ளது.
கருடன் சம்பா: உள்ளுறுப்புகளை பலப்படுத்தும்.
மாப்பிள்ளை சம்பா: நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை அதிகரிக்கும்.
கிச்சிலி சம்பா: இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து உள்ளதால் உடல் வலிமை பெறும். சருமம் பொலிவாகவும் உதவும்.
சீரக சம்பா: உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல் நீங்கும். பாரம்பரிய அரிசிகளில் சுவையான ரகம் இது.
வாலன் சம்பா: பெண்களுக்கு உடல் வலிமை அளிக்கும். சுகப்பிரசவத்துக்கான வலிமையையும் கொடுக்கிறதாம்.
வாடன் சம்பா: ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும்.
கருங்குறுவை: நோயினால் இழந்த வலுவை மீட்டெடுக்க இந்த அரிசி சாதம் உதவும்.
கார் அரிசி: தோல் நோய்களை குணப்படுத்தும் பண்பு இதற்கு உள்ளதாக கூறுகிறார்கள்.
தூயமல்லி அரிசி: தோலின் சுருக்கம் போக்கும். உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது.
சேலம் சன்னா: தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
மூங்கில் அரிசி: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.






