என் மலர்
நீங்கள் தேடியது "உக்ரைன் ரஷியா போர்"
- ரஷியா மீது உக்ரைன் ராணுவத்தினர் அதிநவீன ஆளில்லா விமானங்களை ஏவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
- வாகனங்கள் எரிபொருள் நிரம்ப நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகிறது.
மாஸ்கோ:
உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உலகநாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் போர் தீவிரம் குறையாமல் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் ரஷியா மீது உக்ரைன் ராணுவத்தினர் அதிநவீன ஆளில்லா விமானங்களை ஏவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ரஷியாவின் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளை குறிவைத்து இந்த பொருளாதர சீர்குலைவு தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.
வாகனங்கள் எரிபொருள் நிரம்ப நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகிறது. மேலும் நபர் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்படுகிறது. இதனால் ரஷிய மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
- உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் திட்டம் தொடர்பாக ஆலோசனை
- புதின்தான் போரைத் தீவிரப்படுத்துகிறார் என நேட்டோ தலைவர் குற்றச்சாட்டு
பிரஸ்சல்ஸ்:
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு ஆயுதங்களை வழங்கினால் அது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்த கருத்தை நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கும் கூறியிருக்கிறார்.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் திட்டம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய வெளியறவு கொள்கை தலைவர் ஜோசப் போரெல், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி திமித்ரோ குலேபா ஆகியோரை நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பேசிய ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், 'இந்த ஏகாதிபத்திய வெற்றிப் போரைத் தொடங்கியவர் ரஷிய அதிபர் புடின். அவர்தான் போரைத் தீவிரப்படுத்துகிறார். ரஷியாவின் போருக்கு ஆபத்தான ஆயுதங்களை வழங்க சீனா திட்டமிட்டு இருக்கலாம் என்றும் நாங்களும் அதிகமாக கவலைப்படுகிறோம்' என்றார்.
அதேசமயம், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயிடம் இந்தப் பிரச்சினையை எழுப்பியதாகவும், போரில் எந்த நாட்டிற்கும் சீனா ஆயுதங்களை வழங்காது என்று சீனா உத்தரவாதம் அளித்ததாகவும் போரெல் கூறினார்.






