என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்பாத் எக்ஸ்பிரஸ்"

    • தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிரேக் இணைப்பு துண்டானது.
    • இதனால் அந்த வண்டி வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டது.

    ராணிப்பேட்டை:

    கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரையில் செல்லக்கூடிய தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 6.10 மணிக்கு வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அப்போது ரெயிலின் 6-வது பெட்டியில் இருந்த பிரேக் இணைப்பு துண்டானதால் ரெயில் நகர முடியாமல் இரண்டாவது பிளாட்பாரத்திலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த பிளாட்பாரம் வழியாக செல்ல வேண்டிய அனைத்து ரெயில்களும் மாற்றுப் பாதைகள் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது.

    இதுதொடர்பான தகவல் ஜோலார்பேட்டையில் உள்ள ரெயில்வே உயரதிகாரிகளுக்கும், காட்பாடியில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் சீரமைப்புக் குழுவுடன் விரைந்து வந்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு சுமார் 8 மணியளவில் சீரமைப்பு பணி முடிவடைந்ததும் 2 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டுச் சென்றது.

    சுமார் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் அந்த ரெயிலில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டனர். ரெயில் நிலையத்தில் கழிப்பிட வசதியோ, குடிநீர் வசதியோ இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    ×