என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமதுரை போலீசார்"

    • வடமதுரை போலீஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்.
    • ய்யலூர் அருகே திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள வண்டிகருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடாய்வெட்டி வழிபாடு நடத்தினர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் நிலையம் மிகப்பெரிய எல்லைகளை உள்ளடக்கிய பகுதியாகும். வடமதுரை, அய்யலூர், புத்தூர் உள்பட பல்வேறு மலைகிராமங்களும் இந்த போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது. மேலும் அதிகளவு குற்றச்சம்பவங்கள் நடக்கும் பகுதியாகவும் இது உள்ளது.

    குறிப்பாக கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் அதிகளவு நூற்பாலைகள் செயல்படுவதால் இங்கு பணிபுரியும் மைனர் பெண்கள் கடத்தப்படுவதும் நடந்து வருகிறது. பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் பெண்களை கடத்திச்செல்வதும் பின்னர் போலீசார் அவர்களை மீட்டு வருவதும் நடந்து வருகிறது.

    இதனால் வடமதுரை போலீஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். எனவே வடமதுரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் சார்பாக அய்யலூர் அருகே திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள வண்டிகருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடாய்வெட்டி வழிபாடு நடத்தினர்.

    புதுவருடத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் சம்பந்தமான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும். குற்றசம்பவங்களும் குறைய வேண்டும் என கிடாய்வெட்டி வழிபாடு செய்து விருந்து நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிகழ்விற்கு வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவி, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கிடாவிருந்தில் வடமதுரை காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசார், அவர்களது குடும்பத்தினர் மற்றும் வேடசந்தூர் காவல்நிலைய போலீசார், எரியோடு காவல்நிலைய போலீசார், வேடசந்தூர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போலீஸ் நிலையத்தில் குற்றசம்பவங்களை தடுக்க காவலர்களே கிடாய்வெட்டி வழிபாடு நடத்தியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×