என் மலர்
நீங்கள் தேடியது "அகரகீரங்குடி"
- விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் தலைமை தாங்கினார்.
- முடிவில் வட்டார அட்மா திட்ட மேலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் விவசாய கூலி தொழிலாளி குடும்பங்களுக்கு தென்ன ங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இயமையனாதன், ஒன்றிய கவுன்சிலர் அபிராமி வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக ராஜ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 300 விவசாய குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டியன், வேளாண்மைத்துறை தரக்கட்ட ப்பட்டு உதவி இயக்குனர் சிவவீரபாண்டியன், வேளாண் அலுவலர் சுவாதிகா, உதவி வேளாண் அலுவலர் சுகுமார், ஊராட்சி துணை தலைவர் ராஜா கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார அட்மா திட்ட மேலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.






