என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழ்துளைக் கிணறு விபத்து"

    • தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
    • சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி என்ற கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் அங்கு விளையாடி கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிறுவன் சுமார் 55 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.

    சிறுவன் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×