என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமல் ஏரி"

    • தொடர் மழையின் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பாலாறு அணைக்கட்டு நிரம்பி உள்ளது.
    • ஏரியின் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டு செல்கிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பாலாறு அணைக்கட்டு நிரம்பி உள்ளது. அங்கிருந்து வரும் உபரி நீரால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான தாமல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து. இதனால் தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து ஏரியின் 3 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தாமல் ஏரியின் முழு கொள்ளளவான 18 அடி முழுவதுமாக நிரம்பி மதகுகள் வழியாக நீர் வெளியேறி வருவதால் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஏரியின் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டு செல்கிறார்கள்.

    ×