என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் மோசடி"

    • கணவர் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பதால் வித்யா தனது மகனை கவனிக்காமல் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார்.
    • கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த முரளி என்பவரை வித்யா 3வது திருமணம் செய்து கொண்டார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கூடலூர் 4-வது வார்டு கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்போஸ் (வயது32). இவர் பெங்களூருவில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் வித்யா (30) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கணவர் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பதால் வித்யா தனது மகனை கவனிக்காமல் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனால் அவரது மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீட்டிற்கு வந்த விஜய்போஸ் தனது மனைவியை சத்தம்போட்டார். செல்போனில் யாருடன் பேசுகிறாய் என கண்டித்துள்ளார்.

    மேலும் வித்யாவின் உறவினரிடம் இதுகுறித்து தெரிவித்த விஜய்போஸ் அவரை கண்டிக்குமாறு கூறினார். அப்போதுதான் அவரது உறவினர் மூலம் வித்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அவரை விவாகரத்து செய்து விட்டு தன்னை 2-வது திருமணம் செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து வித்யாவிடம் விஜய்போஸ் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் வித்யா கோபித்துக்கொண்டு மதுரையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மகனுடன் வசித்து வந்த விஜய்போஸ் சமரசம் செய்ய முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் கடந்த மே மாதம் 15ந் தேதி கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த முரளி என்பவரை வித்யா 3வது திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த விஜய்போஸ் அவரது குடும்பத்தினரிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால் வித்யாவின் குடும்பத்தினர் எங்களை மிரட்டினால் வரதட்சணை கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளிப்போம் என தெரிவித்து அவர்களை அனுப்பி விட்டனர்.

    இது குறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விஜய்போஸ் புகார் அளித்தார். அதன்பேரில் வித்யா, அவரது தந்தை சுகுமாறன், தாய் சித்ரா, தம்பி சரண்குமார் மற்றும் முரளி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    வித்யாவின் இந்த செயலுக்கு அவரது குடும்பத்தினரே உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்காக அடிக்கடி கணவரை மாற்றி வாழ்ந்த வித்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது தலைமறைவாக உள்ளதால் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×