என் மலர்
நீங்கள் தேடியது "வேளாண்மை விரிவாக்க"
- தியாகதுருகம் அருகே ரூ.38 லட்சம் மதிப்பில் உதவி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகள் பூமி பூஜை செய்து தொடங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் உதவி வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட கட்டுமான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தியாகதுருகம் யூனியன் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தியாகதுருகம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அப்போது செயற்பொறியாளர் சின்னப்பன், வேளாண்மை அலுவலர் வனிதா, உதவி வேளாண்மை அலுவலர் வினோத், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மலையரசன், எத்திராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






