என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருத்தாசலம்"

    • போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் வழங்காத பட்சத்தில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த எருமனூர் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக குடிநீருடன் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் குடிப்பதற்கோ, சமையலுகோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் கடந்த ஒரு வார காலமாக முற்றிலும் குடிநீர் வழங்கப்படாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் விருத்தாசலம்-முகாசாபரூர் சாலையில் இன்று காலை திடீரென மறியல் போாரட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி குடிநீர் வழங்காத பட்சத்தில் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனைதொடர்ந்து போலீசார் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கிராம மக்கள் சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மறியல் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    • அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, தங்களது ஊரில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தீவலூரை சேர்ந்தவர் பொன்னரசன். இவரது மகன் முத்தமிழ் நிலவன் (வயது12). இந்த ஊரில் சிலருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்தபோது சிறுவன் முத்தமிழ் நிலவன், அவனது தாய் முத்தழகி, 2 சகோதரிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது தெரிய வந்தது.

    இதில் சிறுவன் முத்தமிழ் நிலவன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அவனது தாய், அக்காள் ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, தங்களது ஊரில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இங்குள்ள குடிநீர் தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    எனவே தீவலூர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • அய்யனார் அருள்பாலிக்கும் இடமானது சிறிய வனப்பகுதி ஆகும்.
    • செம்புலிங்க அய்யனார் சுயம்புவாக தோன்றியவர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் சூழ்ந்த இடத்தில் செம்புலிங்க அய்யனார் கோவில் அமைந்துள்ளது. பல லட்சம் மக்களுக்கு குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் விளங்குபவர், இங்கு அருள்பாலிக்கும் செம்புலிங்க அய்யனார்.

    இவர் சுயம்புவாக தோன்றியவர். சிற்பிகளால் செதுக்கப்படாமல், இறைவனின் பேரருளால், ஒரு கல்லில் தானாகவே தோன்றும் தெய்வ உருவத்தை 'சுயம்பு' என்று போற்றி வணங்குவார்கள்.


    இவ்வாலயத்தில் மூலவராக அருளும் பூரணி - புஷ்கலாம்பாள் சமேத செம்புலிங்க அய்யனார் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். முதனை கிராமத்து மக்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கும் இவர் வேட்டைக்குச் செல்லும்போதும், திருவிழா காலங்களில் நடைபெறும் வீதி உலா நிகழ்ச்சியின் போதும், ஒவ்வொரு பக்தர்களின் இல்லங்களையும் தேடி வந்து அருள்பாலிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

    இந்த வீதி உலாவின்போது செம்புலிங்க அய்யனார், யானை மீது ஏறி மேள - தாளம் முழங்க, அரோகரா கோஷங்களுடன் சல்லடம் கட்டி, வில்-அம்பு, கேடயம், சக்கரம் போன்ற ஆயுதங்களுடன் தீவட்டி சுடர் தகதகப்பில் வலம் வருவார்.

    இந்த கோவிலின் பின்புறம் வடக்கு திசை நோக்கி செல்லியம்மன் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கே மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதுடன், தொட்டில் கட்டி வணங்கினால், செல்லியம்மன் மழலை செல்வத்தை வழங்கி குறையை தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


    சபரிமலை தர்ம சாஸ்தாவிற்கு கருப்பு சாமியும், கருப்பண்ணசாமியும் காவல் தெய்வங்களாக விளங்குவது போல, செம்புலிங்க அய்யனாருக்கு உத்தண்டி வீரன், அகோர வீரபத்திரர், கருப்பண்ணசாமி, மதுரை வீரன் ஆகிய சாமிகள் காவல் தெய்வங்களாக விளங்கி அருள்பாலிக்கின்றனர்.

    செம்புலிங்க அய்யனாருக்கு பிரதான காவல் வீரனாக விளங்கும் உத்தண்டி வீரனுக்கு கிழக்கு திசை நோக்கி தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு திசையில் உள்ள வாசல் வழியாக சென்று தான் உள்ளே இருக்கும் உத்தண்டி வீரன், கொப்பாட்டி அம்மனை வணங்க முடியும்.

    துரைராஜ கம்பீர உத்தண்டி மகா வீரரான இவர், சிவப்பு நிற குதிரை மீது அமர்ந்து வில்-அம்பு, கேடயம், வேல் போன்ற 18 ஆயுதங்கள் தாங்கி, முறுக்கிய மீசையுடன் பட்டாடை அணிந்து பாதத்தில் சிலம்பு பூட்டி கிடுகிடு தப்பட்டை மத்தள வாத்தியங்கள், வீணை இசை முழங்க அய்யனாருக்கு முன்பாக, காவலாக பவனி வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இவரை வணங்குவதால் எதிரிகளால் சூழப்படும் தடைகள் அகலும். வேண்டும் வரங்கள் வேண்டிய உடனேயே கிடைக்கும். மனதிற்கு தைரியம் அதிகரிக்கும்.


    அறிவாற்றல் தரும் அகோர வீரபத்திரர்:

    மற்றொரு காவல் தெய்வமான அகோர வீரபத்திரர் தெற்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். இவரை வணங்குவதால் ஞானம் கிடைக்கும். அறிவாற்றல் பெருகும். தடைகள் அகலும். தோஷங்கள் நீங்கும்.

    இதேபோல கருப்பண்ணசாமி கருப்பழகியுடன் மேற்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். இவர் மாந்திரீகத்தால் ஏற்படும் தீமைகளை சரி செய்து, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறார்.


    பொம்மி சமேதரான மதுரை வீரன், புலி வாகனத்தில் கிழக்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். முப்பூசை படையின் போது பலி கொடுப்பதற்கான உத்தரவை இவரே வழங்குவதாக கூறப்படுகிறது.

    தமக்கு வீரன், கிழக்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் தமக்கையை கையில் வைத்து காட்சி தருகிறார். இவர் செம்புலிங்க அய்யனார் பவனி வரும்போதும், வேட்டைக்கு செல்லும்போதும் கிடுகிடுதப் பட்டை முழங்கி முன்னே செல்வார்.

    இத்தகைய சிறப்புமிக்க இந்த செம்புலிங்க அய்யனார் சுவாமிக்கு தைப்பூசத்தன்று சித்தர் ஏரியில் வேல் மூழ்குதல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு திரண்டு வந்து வேல் மூழ்குதல் காட்சியை கண்டுகளிப்பார்கள்.

    அன்றைய தினம் இந்தக் காட்சியை காண வரும் பக்தர்கள் வைத்த கோரிக்கையை செம்புலிங்க அய்யனார் உடனடியாக நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    முள் செடிகள் வளராது:

    செம்புலிங்க அய்யனார் அருள்பாலிக்கும் இடமானது சிறிய வனப்பகுதி ஆகும். இந்த காட்டில் அரிய செடி-கொடி, பல்வேறு மூலிகைகள் நிறைந்துள்ளன. இந்தப்பகுதியை ஆண்ட மகாராஜாவும், மகாராணியும் காட்டின் உள்ளே சென்று செம்புலிங்க அய்யனாரை வழிபட வரும்போது, மகாராணியின் புடவை அப்பகுதியில் இருந்த முள் செடியில் பட்டு கிழிந்துள்ளது.

    இதனால் மனமுடைந்த மகாராணி இந்த காட்டில் முள் செடிகள் இருக்கக்கூடாது என்று சாபமிட்டார். அன்று முதல் இன்று வரை இந்த காட்டின் உள்ளே ஒரு முட்செடி கூட வளரவில்லை என்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தில் சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர் ஏரியின் வலதுபுறத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    • லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் விபத்து
    • வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    கடலூர்:

    விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள அரிசி கடைக்கு சுமார் 50 டன் அரிசி லாரி ஏற்றி வந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது ஏறி வாகனங்கள் நொறுங்கியது.

    அப்போது வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×