என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளியில் துப்பாக்கி சூடு"
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #TexasSchool #Shooting
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னும் பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளியில் மர்ம நபர் இன்று திடீரென நுழைந்தார். அவர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.
இந்த தாக்குதலில் பல மாணவர்கள் பலியாகி உள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், டெக்சாசில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன என பதிவிட்டுள்ளார். #TexasSchool #Shooting






