என் மலர்
நீங்கள் தேடியது "புதுக்கோட்டை மாவட்ட அரசு அலுவலகம்"
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பால், தயிர், சமையல் எண்ணெய், மருத்துவ உறைகள் தவிர தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், கைப்பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்து அரசு அறிவித்துள்ளது.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக ஒரு முறை உபயோகித்து தூக்கி எரிய கூடிய பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்பு, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் டம்ளர், கோப்பை, பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் ஆகியவைகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந் தேதி முதல் உபயோகிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் மாவட்ட அலுவலர்கள் தங்கள் அலுவலக வளாகத்தை மேற்கூறிய பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காத வளாகம் என அறிவிக்க வேண்டும். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களும், வியாபாரிகளும் மேலே குறிப்பிட்டு உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப்பை, காகிதப்பை, கண்ணாடி பாட்டில், எவர்சில்வர் பாட்டில் மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பால், தயிர், சமையல் எண்ணெய், மருத்துவ உறைகள் தவிர தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், கைப்பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்து அரசு அறிவித்துள்ளது.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக ஒரு முறை உபயோகித்து தூக்கி எரிய கூடிய பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்பு, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் டம்ளர், கோப்பை, பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் ஆகியவைகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந் தேதி முதல் உபயோகிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் மாவட்ட அலுவலர்கள் தங்கள் அலுவலக வளாகத்தை மேற்கூறிய பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காத வளாகம் என அறிவிக்க வேண்டும். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களும், வியாபாரிகளும் மேலே குறிப்பிட்டு உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப்பை, காகிதப்பை, கண்ணாடி பாட்டில், எவர்சில்வர் பாட்டில் மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews






