என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனியர் ஆண்கள் கபடி போட்டி"

    • நாடு முழுவதிலும் இருந்து 31 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.
    • புரோ கபடி லீக் சீசன் 12-ல் சிறப்பாக விளையாடிய முன்னணி வீரர்கள் பலர் இத்தொடரில் களமிறங்குகிறார்கள்.

    குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள சாமா உள்விளையாட்டு அரங்கில் 72-வது சீனியர் தேசிய ஆடவர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை (பிப்ரவரி 24) தொடங்கி பிப்ரவரி 27 வரை நடைபெறவுள்ளன. நாடு முழுவதிலும் இருந்து 31 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

    சமீபத்தில் முடிவடைந்த புரோ கபடி லீக் (PKL) சீசன் 12-ல் சிறப்பாக விளையாடிய முன்னணி வீரர்கள் பலர் இத்தொடரில் களமிறங்குகிறார்கள்.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற சர்வீசஸ் (Services) அணி, இந்த முறையும் தேவாங்க் தலால், நவீன் குமார், பாரத் ஹூடா போன்ற நட்சத்திர வீரர்களுடன் பட்டத்தைத் தக்கவைக்கப் போராடும். இவர்களுக்கு ரயில்வே, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தத் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்கள், இந்தியத் தேசிய கபடி அணிக்கும், தேசிய பயிற்சி முகாம்களுக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால், இளம் வீரர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் 32-வது மாவட்ட சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி தூத்துக்குடி மாவட்ட தருவை மைதானத்தில் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் 32-வது மாவட்ட சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி தூத்துக்குடி மாவட்ட தருவை மைதானத்தில் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சிக்கு அமெச்சூர் கபடிக் கழகத் தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக மகா சிமெண்ட் உதவித் தலைவர் சிவராமகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். போட்டிகள் காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை செயற்கை ரப்பர் ஆடுகளத்தில் புரோ கபடி முறையில் நாக் அவுட் முறையில் நடத்தப்படும்.

    போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டியிலும், இந்திய அளவிலான போட்டியிலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் விளையாடுவார்கள்.

    போட்டியில் முதல் இடத்தை பெறும் அணிக்கு 50 ஆயிரமும், 2-மிடம் பிடிக்கும் அணிக்கு 30 ஆயிரமும், 3, 4-மிடம் பிடிக்கும் அணிக்கு 10 ஆயிரமும் வழங்கப்படும்.இதில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும். போட்டியை காண இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

    இத்தகவலை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக செயலாளர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். #tamilnews
    ×