என் மலர்
நீங்கள் தேடியது "பனங்கிழங்கில் பர்பி தயாரிப்பு"
வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலத்தில் பனங்கிழங்கை மூலப்பொருளாக கொண்டு பர்பி தயாரிக்கும் பணியில் தமிழாசிரியர் கார்த்திகேயன் ஈடுபட்டுள்ளார். #PanangKizhangu
வேதாரண்யம்:
பனங்கிழங்கை பறித்து பின்பு அதனை வேகவைத்து பனங்கிழங்கினை நன்கு உலர வைத்து மாவாக்கி அதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலை, ரவா, முந்திரி பருப்பு, ஏலக்காய், நெய் சேர்த்து வெல்லப்பாகும் கொண்டு தயாரிக்கப்படும் கேக் வடிவிலான பனங்கிழங்கு பர்பி தயார் செய்கிறார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கும் வகையில் உண்பதற்கு ஏற்றதாகவும் அமைகிறது.
வழக்கமாக ஒரு பனங்கிழங்கு முப்பது பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதை பர்பியாக தயார் செய்யும்பொது குறைந்த பட்சம் ரூ.3 மதிப்பு கூட்டப்பட்டப்படுகிறது. பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மாவுச்சத்து போன்றவையுடன் வெல்லம் இணையும்போது இரும்புச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது. உடல் எடையைக் குறைத்து உடலை வலுப்படுத்துகிறது. பனங்கிழங்கு மலச்சிக்கலை தீர்த்து உடலில் உள்ள கழிவுகளையும் பிரித்தெடுத்து வெளியேற்றுகிறது.
பனையின் பாலிலிருந்து மதிப்பு கூட்டித் தயாரிக்கப்பட்ட பொருட்களான பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கட்டி (கருப்பட்டி), பனஞ்சீனி என்ற வரிசையில் பனங்கிழங்கு புதிய பர்பியும் தயார் செய்யப்படுகிறது.
ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரு கிலோ பர்பி தயார் செய்ய 25 பனை கிழங்கு உள்பட மற்ற பொருட்கள் அனைத்தும் சேர்த்து ரூ.200 செலவாகிறது என்றும் ரூ.250-க்கு ஒரு கிலோ பர்பி விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார். #PanangKizhangu
இன்று நாம் பகட்டான வாழ்க்கையில் பாரம்பரிய உணவுகளை மறந்து பாஸ்ட்புட்டிற்கு மாறி வருகின்றோம். உணவே மருந்தாக இருந்த காலம் போய் இன்று வேளைக்கு இத்தனை மாத்திரைகள் என்று எண்ணி உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பனங்கிழங்கை பறித்து பின்பு அதனை வேகவைத்து பனங்கிழங்கினை நன்கு உலர வைத்து மாவாக்கி அதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலை, ரவா, முந்திரி பருப்பு, ஏலக்காய், நெய் சேர்த்து வெல்லப்பாகும் கொண்டு தயாரிக்கப்படும் கேக் வடிவிலான பனங்கிழங்கு பர்பி தயார் செய்கிறார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கும் வகையில் உண்பதற்கு ஏற்றதாகவும் அமைகிறது.
வழக்கமாக ஒரு பனங்கிழங்கு முப்பது பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதை பர்பியாக தயார் செய்யும்பொது குறைந்த பட்சம் ரூ.3 மதிப்பு கூட்டப்பட்டப்படுகிறது. பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மாவுச்சத்து போன்றவையுடன் வெல்லம் இணையும்போது இரும்புச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது. உடல் எடையைக் குறைத்து உடலை வலுப்படுத்துகிறது. பனங்கிழங்கு மலச்சிக்கலை தீர்த்து உடலில் உள்ள கழிவுகளையும் பிரித்தெடுத்து வெளியேற்றுகிறது.
பனையின் பாலிலிருந்து மதிப்பு கூட்டித் தயாரிக்கப்பட்ட பொருட்களான பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கட்டி (கருப்பட்டி), பனஞ்சீனி என்ற வரிசையில் பனங்கிழங்கு புதிய பர்பியும் தயார் செய்யப்படுகிறது.
ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரு கிலோ பர்பி தயார் செய்ய 25 பனை கிழங்கு உள்பட மற்ற பொருட்கள் அனைத்தும் சேர்த்து ரூ.200 செலவாகிறது என்றும் ரூ.250-க்கு ஒரு கிலோ பர்பி விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார். #PanangKizhangu






