என் மலர்
நீங்கள் தேடியது "வேலூரில் ரவுடிகள் கைது"
வேலூர் மாவட்டத்தில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 22 பேர் ஒரே நாள் இரவில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி, விருதம்பட்டு, வேலூரில் ஓல்டு டவுன், சலவன்பேட்டை, கஸ்பா, தோட்டப்பாளையம் மற்றும் காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் என பல்வேறு இடங்களில் மணல் கடத்தல், சாராய விற்பனை, காட்டன் சூதாட்டம் கொடி கட்டி பறக்கிறது.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை குறிவைத்து காட்டன் சூதாட்டம் அதிகம் நடக்கிறது. அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பல கூலித் தொழிலாளர்கள் பணத்தை இழக்கின்றனர். முன்பெல்லாம் மறைவிடங்களில் காட்டன் சூதாட்டம் நடந்தது.
தற்போது தற்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் துணிகரமாக நடக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், மணல் கடத்தல், சாராய விற்பனை மற்றும் காட்டன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
சூதாட்ட கும்பலிடம் போலீசார் சிலர் மாமூல் பெற்றுக்கொண்டு தொடர்பில் இருப்பதால், பொதுமக்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம், சாராய விற்கும் கும்பலை பிடிக்க எஸ்.பி. பர்வேஷ்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் சிறப்பு ரோந்து மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முடுக்கிவிடப்பட்டனர். இந்த இரவு நேர வேட்டையில் மணல் கடத்தியது, சாராயம் விற்றது, காட்டன் சூதாட்டம் நடத்தியது ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 22 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஒரே இரவில் மொத்தம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 15 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி, விருதம்பட்டு, வேலூரில் ஓல்டு டவுன், சலவன்பேட்டை, கஸ்பா, தோட்டப்பாளையம் மற்றும் காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் என பல்வேறு இடங்களில் மணல் கடத்தல், சாராய விற்பனை, காட்டன் சூதாட்டம் கொடி கட்டி பறக்கிறது.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை குறிவைத்து காட்டன் சூதாட்டம் அதிகம் நடக்கிறது. அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பல கூலித் தொழிலாளர்கள் பணத்தை இழக்கின்றனர். முன்பெல்லாம் மறைவிடங்களில் காட்டன் சூதாட்டம் நடந்தது.
தற்போது தற்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் துணிகரமாக நடக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், மணல் கடத்தல், சாராய விற்பனை மற்றும் காட்டன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
சூதாட்ட கும்பலிடம் போலீசார் சிலர் மாமூல் பெற்றுக்கொண்டு தொடர்பில் இருப்பதால், பொதுமக்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம், சாராய விற்கும் கும்பலை பிடிக்க எஸ்.பி. பர்வேஷ்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் சிறப்பு ரோந்து மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முடுக்கிவிடப்பட்டனர். இந்த இரவு நேர வேட்டையில் மணல் கடத்தியது, சாராயம் விற்றது, காட்டன் சூதாட்டம் நடத்தியது ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 22 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஒரே இரவில் மொத்தம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 15 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.






