search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin inflammation"

    • இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம்.
    • சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம்.

    கொய்யா பழத்தை போலவே அதன் இலைகளும் உடல் நலனை பாதுகாப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அதுபற்றி பார்ப்போம்.

    * சருமத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டால் கொய்யா இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம். சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து சரும பாதிப்புக்குள்ளான இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

    * இயற்கையாகவே சருமத்திற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் தன்மை கொய்யா இலைகளுக்கு உண்டு. கொய்யா இலைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். அவை நன்கு உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக இவ்வாறு செய்து வந்தால் சருமம் புது பொலிவு பெறும்.

    * கோடை காலங்களில் சருமம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். கொய்யா இலைகளை பயன்படுத்தி கருமை நிற முகத்தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். அது முகத்தில் உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

    * கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சினையும் எட்டிப்பார்க்காது. சரும சுருக்கங்களை போக்கி வயதான தோற்றத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

    * அரைத்த கொய்யா இலையுடன் ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவி வரலாம். இவ்வாறு தினமும் செய்துவந்தால் சருமத்தில் அழுக்கு படிவதை தவிர்த்துவிடலாம். சருமத்திற்கு கூடுதல் அழகும் சேர்க்கலாம்.

    * பொடுகு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிடலாம்.

    * எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.

    • சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.
    • சருமத் துளைகளில் ஏற்படும் நோய்த்தொற்றை தடுக்கின்றன.

    முக அழகை மெருகேற்றவும், சருமத்தின் இளமை தன்மையை அதிகரிக்கவும் பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறோம். அவற்றில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள், நாளடைவில் சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. சரும பராமரிப்பை பொறுத்தவரை, இயற்கை நமக்கு ஏராளமான பொருட்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் எளிய முறையில் சருமத்தின் பொலிவை அதிகரித்து, முக அழகை மேம்படுத்த வாதுமை (வால்நட்) எண்ணெய் உதவுகிறது.

    வாதுமையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் நிறைந்திருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகள் சருமத்தை பிரகாசமாக்கும் தன்மை கொண்டவை. அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் நிறைந்த வாதுமை எண்ணெய் பல நூற்றாண்டுகளாகவே சரும பராமரிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.

    வாதுமை எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும். புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள முடியும்.

     வயது முதிர்ச்சியின்போது ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தின் விளைவாக சருமத்தில் சுருக்கங்களும், கோடுகளும் உண்டாகின்றன. வாதுமை எண்ணெய்யில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் பிரீராடிக்கில்களை நடுநிலைப்படுத்தி செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன. இதன்மூலம் சருமம் முதிர்ச்சி அடையும் செயல்பாடு தாமதமடையும்.

    வாதுமை எண்ணெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், அதிக உணர்திறன் கொண்ட சருமத்தினருக்கு பல நன்மைகளை தருகின்றன. தோல் அழற்சி, அரிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் அந்த இடங்களில் வாதுமை எண்ணெய்யை மேற்பூச்சாக பூசி வரலாம்.

    வாதுமை எண்ணெய்யின் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், சருமத் துளைகளில் ஏற்படும் நோய்த்தொற்றை தடுக்கின்றன, முகப்பருக்களை நீக்குகின்றன. இயற்கையான சரும நிறத்தை மேம்படுத்துகின்றன.

    சருமத்தில் ஆழமாக ஊடுருவும் திறன் கொண்ட வாதுமை எண்ணெய் புதிய செல்களின் உற்பத்தியை தூண்டும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.

    ×