என் மலர்
நீங்கள் தேடியது "Sivaranjiniyum Innum Sila Pengallum"
வஸந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் அமெரிக்காவின் இரு சர்வதேச திரைப்பட விழாவுக்காக தேர்வாகியுள்ளது. #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth
இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டுக்களை பெற்று வரும் இந்த படம் அடுத்ததாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்பட விழா மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், மயக்கம் என்ன சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து, மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையை உருவாக்கி வஸந்த் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
மும்பை திரைப்பட விழா, கேரள சர்வதேச திரைப்பட விழா, பூனே சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படத்தில் பிரத்யேகமாக பின்னணி இசை இல்லாதது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்றது. மேலும் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth
வஸந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth
இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டுக்களை பெற்று வரும் இந்த படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், மயக்கம் என்ன சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து, மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்தவாரம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. முன்னதாக மும்பை திரைப்பட விழா, 23-வது கேரள சர்வதேச திரைப்பட விழா, ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழாவிலும் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது.

இந்த திரைப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். குறிப்பாக, பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை வைத்து திரைக்கதையாக்கி, இயக்குனர் வஸந்த் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth #PIFF






