என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senthilkumar M.L.A. Started"

    • ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 291, பாகூர் திரவுபதியம்மன் கோவில் வீதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 739 ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட சின்ன ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில் பழைய நீர்தேக்க தொட்டி அருகே கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 291, பாகூர் திரவுபதியம்மன் கோவில் வீதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 739 ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர் புனிதவதி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர், தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாகூர் தொகுதி மணப்பட்டு ரோடு, ரத்னா நகர், மாசிலாமணி நகர் பகுதிக்கு சாலை வசதி இல்லாமல் மழைகாலத்தில் அவதிப்பட்டு வந்தனர்.
    • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுத்து வந்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி மணப்பட்டு ரோடு, ரத்னா நகர், மாசிலாமணி நகர் பகுதிக்கு சாலை வசதி இல்லாமல் மழைகாலத்தில் அவதிப்பட்டு வந்தனர். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுத்து வந்தார்.

    அதன்படி அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம், ரத்னா நகர் புதிய குடியிருப்பு பகுதிக்கு மண் சாலை அமைத்து மேம்படுத்த 6 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும், மாசிலாமணி நகரில் மண் சாலை அமைக்க 4 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவிலும், கொரவள்ளிமேடு, உமரன் காடு ஏரியை 21 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.31லட்சத்து 88ஆயிரம் ஆகும். இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு, பணியைத் தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×