search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sentence imposed"

    • பொன்முடி மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கிய உத்தரவு.
    • திருக்கோவிலூர் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    மேலும், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    திருக்கோவிலூர் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.

    இதுகுறித்து கருத்து தெரிவித்து ஆர்.எஸ்.பாரதி, "பொன்முடி வழக்கில் இது முதற்கட்ட வெற்றி, இறுதி வெற்றியை பொன்முடி பெறுவார். இந்த வழக்கில் பொன்மடி குற்றமற்றவர் னெ நிச்சயம் தீர்ப்பு வரும் என நம்புகிறோம்" என குறிப்பிட்டார்.

    ×