search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Semmari Aadu Review"

    சதீஸ் சுப்ரமணியம் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள `செம்மறி ஆடு' படத்தின் விமர்சனம். #SemmariAaduReview #SathishSubramaniam
    பெற்றோரை இழந்த நாயகன் சதீஸ் சுப்ரமணியம் மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருகிறார். வேலைக்கு ஏதும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வரும் இவர் மீது நாயகி ஹரிதாவுக்கு காதல் வருகிறது. ஹரிதாவின் அம்மா வட்டி தொழில் செய்து வருகிறார்.

    ஹரிதாவுக்கு சதீஸ் மீது தீவிரமான காதல் இருக்க, சதீஸ், ஹரிதா மீது ஈர்ப்பில்லாமல் இருக்கிறார். இந்த நிலையில், வேறு சாதி பெண்ணை காதலிக்கும் தனது நண்பரை அவரது காதலியுடன் சேர்த்து வைக்கிறார் சதீஸ். இது ஊருக்குள் பெரிய பிரச்சனையாக மாற சதீஸ் ஊரைவிட்டு வெளியேறுகிறார்.

    இந்த நிலையில் மற்றொரு நாயகியான கோபிதாவை பார்க்கும் சதீசுக்கு அவர் மீது காதல் வருகிறது. கோபிதாவும் சதீஸை காதலிக்க இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நிலையில், சதீஸ் கொலை செய்துவிட்டதாக போலீஸார் அவரை கைது செய்கின்றனர்.

    கடைசியில், உண்மையில் கொலை செய்தது யார்? கொலைப்பழியுடன் ஜெயிலுக்கு போன சதீஸ் வாழ்க்கை என்னவானது? கோபிதாவை மணந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சதீஸ் சுப்ரமணியம் நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என பொறுப்புடன் தனது பணியை செய்திருக்கிறார். நாயகிகள் ஹரிதா, கோபிதா கொடுத்த கதபாத்திரத்தை சிறப்பாக மெருகேற்றியிருக்கின்றனர். மற்ற துணை கதாபாத்திரங்களும் காட்சிகளுக்கு ஏற்றவாறு நடித்து வலுசேர்த்திருக்கிறார்கள்.

    கிராமத்தில் வாழக்கூடிய மக்களின் வாழ்க்கையை அப்பட்டமாக காட்ட நினைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சதீஸ் சுப்ரமணியம். சாதிய கொடுமை, குடிப்பழக்கம், நெறிமுறை தவறி இருப்பவர்கள் மற்றும் அவர்களால் ஏற்படும் மாற்றங்கள், மண் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. 

    ரெஞ்சித் வாசுதேவ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். ஜெயகிருஷ்ணா ஒளிப்பதிவில் கிராமத்து சாயல் சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `செம்மறி ஆடு' வாசனையானது. #SemmariAaduReview #SathishSubramaniam

    ×