search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sankara"

    • சற்று பருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்
    • சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு.

    மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமி அன்று விரதமிருந்து வணங்குவது சிறப்பானது. அதுவும் அந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் ரொம்ப விசேஷம். அதனால் எல்லாவிதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

    அதை தவிர நாம் பணத்தை எப்போது பயன்படுத்தினாலும் அப்போதெல்லாம் `ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம' என்று சொல்லிவிட்டு பயன்படுத்தினால் நம்மகிட்ட எப்பவும் பணம் இருந்துகிட்டேயிருக்கும்.

    ரொம்ப சின்ன வயதிலேயே துறவுபூண்டவர் ஆதிசங்கரர். துறவு நெறிக்கு ஏற்றவாறு தினமும் இறைவழிபாட்டை முடித்தக்கொண்டு அதன் பின்னால் யாசகம் வாங்கி உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அப்படி யாசகம் வாங்குவதற்காக ஒரு வீட்டுக்கு சென்றார். அவர் போன வீடு ஏழை பிராமணரான சோமதேவருடையது. அவர் சென்றபோது சோமதேவர் வீட்டில் இல்லை வெளியில் சென்றிருந்தார். அவருடைய மனைவியான தர்மசீலை மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அந்த வீட்டின்முன் நின்ற சங்கரர் `பவதி பிசோந்தேஷி' என்றார்.

    வறுமையில் வாடினாலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்று பதில் கூறு தர்மசீலைக்கு வருத்தமாக இருந்தது. வேறு வழியின்றி `கொடுப்பதற்கு ஒன்றுமில்லை' என்று மனம் வருந்திக்கூறினாள்.

    அதைக்கேட்ட சங்கரர் `அன்னமிட வழியில்லாவிட்டாலும் பரவாயில்லை. உண்ணத்தகுந்த பொருள் எதுவாக இருந்தாலும் கொடுங்கள்'! என்றார்.

    வீட்டில் அங்குமிங்கும் தேடிப்பார்த்தாள் தர்மசீலை. எப்போதோ செய்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் இருந்தது.

    அதைக் கொண்டுபோய் ஆதிசங்கரருக்கு வழங்கினாள்.

    `அம்மையே தாங்கள் அன்புடன் அளித்ததால் இந்த நெல்லிக்காய் இவ்வுலகிலேயே சிறந்த பொருளாகும்' என்றார் சங்கரர்.

    இந்த ஏழ்மை நிலையிலும் அடுத்தவருக்குத் தரவேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதே என்று வியந்த அவர் அந்தத் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத் திருமகளை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். அவ்வாளவுதான்.

    வானத்தில் இருந்து தங்க நெல்லிக்கனிகள் அந்த வீட்டின்மேல் மழையென கொட்டின. `கனகதாராவை பாடுவோர் அனைவருக்கும் தனது அருள் கிட்டும்' என்று திருமகள் மறைந்தாள்.

    செல்வம் தரும் வலம்புரிச்சங்கு

    கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு. சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள். சற்று பருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்.

    சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள். ஒரு சங்கின் சுருள் பகுதி அதனுடைய வாய்பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரிச்சங்கு எனப்படும்.

    ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு.

    வலம்புரிச் சங்கு, இடம் புரிச்சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும். இந்த வலம்புரிச்சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.

    தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு.

    ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம் புரிச்சங்கு. இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் `ஓம்' என்ற சப்தம் கேட்கும்.

    வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும் பலவித நன்மைகள் கிடைக்கும்.

    மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச்சங்கைத்தொடக்கூடாது. சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளி தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்கக்கூடாது.

    செல்வத்திற்கு அதி தெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்ல பட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும் வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்து பால் பாயசம் செய்து பசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10 மணியில் இருந்து 1 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். இப்படிச்செய்தால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை விட்டு வாசற்படியில் தெளிக்கவும். இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி, பொறாமை நீங்கும்.

    ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

    குழந்தைகளுக்கு இதில் பசும் பால் ஊற்றி வைத்துப் பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

    வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.

    இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.

    மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள் தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள்.

    சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பெ£ன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறைப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள்.

    மந்தகாச முகமுடையவள். தங்க பிராகாரங்களைக் கொண்டது இவள் பவனம் கருணையுடையவள். வஸ்திரம், ஆபணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள்.

    அனைத்தும் தன்னிடம் நிரம்பி இருப்பதால் திருப்தியுடையவள் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

    தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதார குணமுடையவள்.

    இவள் `ஈம்' என்ற பீஜாட்சரத்தை உடையவள் இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள். இவளை வணங்கு பவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள். தரித்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள்.

    மகாலட்சுமி சூரியன் போன்றும் பிரகாசிப்பாள் இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது.

    இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் கீர்த்தி என்பவளும் பக்தன் வீடு தேடி வந்தடைவர்.

    இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம். இவளே செழிப்பை தருபவள் கோமயத்தில் வாசம் செய்பவள்.

    சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈஸ்வரி. ஆசையை நிறைவேற்றி, வாக்குக்கு சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருள்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

    மகாலட்சுமியின் திருக்குமாரர் கர்தமர் சிக்லீதர் என்ப வரும் இவள் அன்புக்குமாரரே. இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள்.

    செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள். இந்த பெருமை களையெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மைவிட்டு அகலாதிருக்க வேண்டும் எனப்பிரார்த்திக்க வேண்டும்.

    இரு யானைகளுடைய லட்சுமி

    யானைகள் இரு புறமும் கலச நீராட்டும் லட்சுமியே எங்கும் சாதாரணமாகத் தென்படும் உருவம். முதன் முதல் இந்த கஜலட்சுமியின் வடிவிலேயே சிற்பியின் கனவு எழுந்தது. ஸ்ரீசுக்தத்தின் வருணனையே இதற்கு அடிப்படையாகும். வேத காலத்திலேயே வேரூன்றிப்போன இந்த கற்பனையை கல்லில் எங்கும் காணலாம்.

    ×