என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Saint Roch"
- 20-ந்தேதி புனிதரின் அலங்கார தேர்ப்பவனியும் நடக்கிறது.
- 21-ந்தேதி தேர் பவனியும், இரவு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
திங்கள்சந்தை அருகே உள்ள ஆரோக்கியபுரம் ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி புதிய கொடிமரத்தை அர்ச்சித்து கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து திருப்பலி, உறுதிபூசுதல் போன்றவை நடைபெறும். நிகழ்ச்சியில் பங்குதந்தை டோமினிக் சாவியோ முன்னிலை வகிக்கிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.
20-ந்தேதி முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலியும், இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீரும், 8.30 மணிக்கு புனிதரின் அலங்கார தேர்ப்பவனியும் நடக்கிறது. 21-ந்தேதி காலை 9 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறும். இதற்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் யேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பிரம்மஸ்சிங் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர் பவனியும், இரவு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை டோமினிக் சாவியோ, பங்கு பேரவை உதவி தலைவர் பீட்டர் தாஸ், செயலாளர் மேரி சர்ஜீன், உதவிச் செயலாளர் மேரி சுகந்தி, பொருளாளர் மரிய ஆரோக்கியம் மற்றும் பங்குமக்கள், பக்த சபைகள் இணைந்து செய்துள்ளனர்.
- இந்த திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
- 20-ந்தேதி இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனி ஆகியவை நடக்கிறது.
நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புனித ஆரோக்கியநாதர் ஆலய குடும்ப விழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள் நடக்கிறது. தொடர்ந்து ஜோசப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிளாட்சன் தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் எடிசன் மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து விழா நாட்களில் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி, இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் 14-ந்தேதி காலை 8 மணிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் பெஸ்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், 15-ந்தேதி இரவு 9 மணிக்கு அன்னை மரியாவின் தேர்பவனி, 20-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனி ஆகியவை நடக்கிறது.
21-ந்தேதி காலை 8 மணிக்கு மறைமாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் பெனிட்டோ தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 2 மணிக்கு ஆடம்பர தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 8.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஆன்டணி கோமஸ் தலைமையில் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்