என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sai J. Saravanankumar"

    • ஊசுடு தொகுதி ஊசுட்டேரி முதல் பத்து க்கண்ணு வரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
    • எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தும் பணி ரூ.16.65 மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி ஊசுட்டேரி முதல் பத்து க்கண்ணு வரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

    ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் தீவிர முயற்சியால், இரும்பு கம்பம் அமைத்து எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தும் பணி ரூ.16.65 மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

    இதனை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மின் துறை செயற்பொறியாளர் ராமநாதன், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் அருணகிரி, இளநிலை பொறியாளர் செல்வராஜ், தொகுதி பா.ஜனதா தலைவர் சாய் தியாகராஜன், ஊசுடு தொகுதி மின்துறை பொறுப்பாளர் ஆனந்த், பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை காந்தி சிலை எதிரே இந்திய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து 'சாராஸ்' கைவினைப் பொருள் கண்காட்சி நடைபெற்றது.
    • கிராம புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் மோடி திட்டங்களை வழங்கி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை காந்தி சிலை எதிரே இந்திய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து 'சாராஸ்' கைவினைப் பொருள் கண்காட்சி கடந்த 17-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்து நிறைவடைந்தது.

    நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், கைவினைப் பொருட்கள் விற்பனையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் அமைத்த அரங்கில் அதிகப்படியான விற்பனை நடந்து முதலிடத்தையும், உத்தர பிரதேசம் 2-ம் இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் 3-ம் இடத்தையும், ஆந்திரா 4-வது இடத்தையும் பிடித்து விற்பனையில் சாதனை படைத்தது.

    விற்பனையில் சாதனை படைத்த அனைவருக்கும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி அமைச்சர் பேசுகையில், பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் கிராமப்புற மக்களின் மேம்பாடு குறித்து அவரது ஒவ்வொரு திட்டமும் கிராமத்தை நோக்கியே உள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பு கிராம புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் மோடி திட்டங்களை வழங்கி வருகிறார்.

    மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு நிதியையும் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பொது மக்களுக்கு முழுமையாக செலவிட வேண்டும் என்ற ஆசையோடு உள்ளார். இவ்வாறு பேசினார். இதில், இளநிலை பொறியாளர் ராமன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக் பாகி, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி இணை அதிகாரி லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உணவு தரகட்டுப்பாட்டு துறையின் மூலம் அங்கீகார சான்றிதழ் பெற்று "நெய்தல்" என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர்.
    • பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என அனைத்து வயதினரும் உட்கொள்ளக்கூடிய ஒரு உணவாகும்.

    புதுச்சேரி:

    குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவண ன்குமார் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இயங்கும் அனைத்து திட்டங்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-

    ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ் செயல்படும் உணவு, ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியம் மற்றும் சுத்தம் திட்டத்தின் மூலம் அரியாங்குப்பம், வில்லி யனூர், காரைக்கால் ஆகிய மூன்று வட்டாரங்களில் உள்ள 40 சுய உதவிக்குழு கிராமப்புறபெண்களுக்கு, தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் மூலம் 3 நாட்கள் பயிற்சி பெற்று தற்பொழுது அவர்களை தொழில் குழுக்களாக மாற்றி முறையாக உணவு தரகட்டுப்பாட்டு துறையின் மூலம் அங்கீகார சான்றிதழ் பெற்று "நெய்தல்" என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர்.

    மக்கள் அனைவரும் சிறுதானிய உணவை அதிகமாக பயன்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க இது மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக திகழ்கின்றது.

    அனைத்து வயதினரும் சிறுதானிய உணவை உட்கொ ள்ளலாம். பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என அனைத்து வயதினரும் உட்கொள்ளக்கூடிய ஒரு உணவாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அரசு செயலர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

    ×