search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qube"

    கியூப்புக்கு பதில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் என்று அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன் தெரிவித்தார். #Parthiban
    நடிகர் விஷால் தலைமையிலான அணி, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதும் பல வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமான ஒன்று கியூப் பிரச்சினை.

    கியூப்புக்கு மாற்றாக மற்றொரு தொழில்நுட்பத்தை கொண்டுவருவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், மைக்ரோ பிளெக்ஸ் நிறுவனமும் இணைந்து யூனிட் ஒன்றை திறந்துள்ளனர்.

    இதன் திறப்புவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு, 5 ஸ்டார் கதிரேசன், நடிகர் பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:-

    இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்கள் தங்களுக்கென மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கி இருப்பது இதுதான் முதல்முறை. உலக தரத்திற்கு இணையாக அனைத்து விதமான தொழில்நுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருக்கும் திரையரங்கிற்கும் உடுமலை சண்முகா திரையரங்கிற்கும் டெலிவரி செய்து சோதனை செய்யப்பட்டது.



    100 சதவீதம் இது வெற்றி அடைந்தது. இது ஒரு நல்ல நிறுவனம். முதல் அடி எடுத்து வைத்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தன் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான முதல் ஆரம்பம்.

    இதன் விலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சரியான விலையில் தரமான பொருளை தர அந்த நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அவர்களுக்கு ஒரு டெக்னீஷியனாக நட்புடன் ஒரு வி‌ஷயத்தை விளக்க விரும்புகிறேன். தற்போது மாறும் தொழில் நுட்பத்திற்கேற்ப நாம் மாறவில்லை என்றால் நம் இடத்திற்கு வேறு யாராவது வந்துவிடுவார்கள்.

    பிலிமில் இருந்து டிஜிட்டலுக்கு மாறுவதற்கு 5 முதல் 10 வருடம் தேவைப்பட்டது. இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல அவ்வளவு காலம் தேவைப்படாது. 5 மாதங்களே போதுமானது.

    இந்த தொழில்நுட்பத்தை தயாரிப்பாளரோ, விநியோகஸ்தர்களோ புரிந்துகொள்ளவில்லை என்றால் இத்துறை நம்மை விலக்கிவைத்துவிடும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பகைமை இல்லாமல் எந்த கருத்து வேறுபாடாக இருந்தாலும் நமக்குள்ளேயே பேசி சுமூகமாக தீர்ப்பது நல்லது.

    இது தயாரிப்புதுறை தனக்கான சந்தையை தானே உருவாக்கிய நுட்பமே தவிர யாருக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதனால் தயாரிப்பாளர்களுக்கு 100 சதவீதம் நன்மை உண்டு. சென்சாருக்கு ஒரு திரையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதுவும் மிக குறைந்த விலையில் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள். நிர்வாகிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்கள் நன்றாக இருக்க முடியும். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    விழாவில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது:-

    இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாற்காலிகள் எல்லாம் பின்னாடி இருந்தது. நாங்க தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளிட்டு வந்தோம். ஏனென்றால் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரும் வழி இந்த நாற்காலிகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான்.

    அது போல தான் இந்த மைக்ரோ ஸ்டூடியோவின் முதல் படி. ஒருவன் பார் மசியில் கேட்கிறான். தேள் கொட்டியது என்று மருந்து வாங்கி சென்றாயே இப்போது மறுபடியும் எதுக்கு வந்தாய் என்று கேட்கிறான். அதற்கு அவர் மருந்து கொட்டிவிட்டது என்றான்.

    தேள் கொட்டினால் கூட பரவாயில்லை. மருந்து கொட்டியதென்றால் ரொம்ப கஷ்டம். அதுபோல் சினிமா வியாபாரத்தில் எந்த பிரச்சினையும் இருக்கலாம். அதற்கு நமக்குள்ளேயே ஒற்றுமை இருந்தால் தான் அதை சீர் செய்ய முடியும். குறிப்பா செல்வமணி பெப்சியின் தலைமைக்கு அவர் வந்தவுடன் நல்ல ஒற்றுமை வந்துள்ளது.

    நான் கிட்டத்தட்ட 25 வருடம் சினிமாவில் உள்ளேன். அப்போது இல்லாத ஒற்றுமை இப்போது வந்துள்ளது. தமிழ் சினிமா செல்வமணி சொன்னது போல் டெக்னிக்கெல்லாம் புரிந்து கொண்டு சினிமாவை நல்ல முறையில் கொண்டு வருவோம். #Parthiban

    ×