search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry Girl Murdered Case"

    • கழிவுநீர் வாய்க்காலில் சிறுமி உடல் மீட்கப்பட்டதால் அழுகிய நிலையில் இருந்தது.
    • சிறுமியின் உடலை ஜிப்மர் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது19), விவேகானந்தன்(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கழிவுநீர் வாய்க்காலில் சிறுமி உடல் மீட்கப்பட்டதால் அழுகிய நிலையில் இருந்தது.

    சிறுமியின் உடலை ஜிப்மர் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த சிறுமியின் உடலை உறுதிப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனால் சிறுமியின் பெற்றோரிடம் முத்தியால் பேட்டை போலீசார், கதிர்காமம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவின் மூலம் ரத்த மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

    இந்த ரத்த மாதிரிகள் கிருமாம்பாக்கத்தில் உள்ள தடவியல் துறைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    ×