search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public visited"

    தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து கப்பல் கடலூர் வந்தது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    கடலூர்:

    காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பயங்ரவாதிகள் தாக்குதலில் 40-க் கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ராணுவத்தினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அதிநவீன பாதுகாப்பு ரோந்து கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்டு இன்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரைக்கு வந்தது. அதில் கடற்படை வீரர்கள் 5 பேர் இருந்தனர். கடலூர் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுரு நாதன் மற்றும் போலீசார் அவர்களை வரவேற்றனர். இந்த கப்பலை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    கடலூருக்கு வந்த இந்த கப்பல் தண்ணீரிலும் மற்றும் தரையிலும் செல்லக் கூடியது ஆகும். இந்த கப்பல் மூலம் கடற்கரை மற்றும் கடற்கரை ஓரமாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு கடற்கரைப் பகுதியில் கடற்படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ×