என் மலர்
நீங்கள் தேடியது "Prisoners Medical Check Up"
வேலூர் ஜெயிலில் 2-வது கட்டமாக கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் ஜெயிலில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணிப்பது தொடர்கதையாக உள்ளது.
கடந்த வாரங்களில் 2 கைதிகள் திடீரென இறந்தனர். இதையடுத்து, ஜெயிலில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் கொலை வழக்கில் கைதான திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சவுகத் அலி 26-ந் தேதி திடீரென நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவால் அவதியுற்ற அவரை, சிறை அதிகாரிகள் மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 27-ந் தேதி சிகிச்சை பலனின்றி கைதி சவுகத்அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, 28-ந் தேதி வேலூர் ஆண்கள் ஜெயிலில் 5 பேர் கொண்டு மருத்துவக் குழுவினர், 250 கைதிகளுக்கு கண், காதுகளை பரிசோதித்து முழு உடல் பரிசோதனை செய்து மனநல ஆலோசனை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக ஆண்கள் ஜெயிலில் 200 கைதிகளுக்கு மருத்துவ குழுவினர் இன்று முழு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மதியத்திற்கு பிறகு வேலூர் பெண்கள் ஜெயிலில் பெண் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
வேலூர் ஜெயிலில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணிப்பது தொடர்கதையாக உள்ளது.
கடந்த வாரங்களில் 2 கைதிகள் திடீரென இறந்தனர். இதையடுத்து, ஜெயிலில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் கொலை வழக்கில் கைதான திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சவுகத் அலி 26-ந் தேதி திடீரென நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவால் அவதியுற்ற அவரை, சிறை அதிகாரிகள் மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 27-ந் தேதி சிகிச்சை பலனின்றி கைதி சவுகத்அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, 28-ந் தேதி வேலூர் ஆண்கள் ஜெயிலில் 5 பேர் கொண்டு மருத்துவக் குழுவினர், 250 கைதிகளுக்கு கண், காதுகளை பரிசோதித்து முழு உடல் பரிசோதனை செய்து மனநல ஆலோசனை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக ஆண்கள் ஜெயிலில் 200 கைதிகளுக்கு மருத்துவ குழுவினர் இன்று முழு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மதியத்திற்கு பிறகு வேலூர் பெண்கள் ஜெயிலில் பெண் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.






