search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponneri fire accident"

    பொன்னேரியை அடுத்த உத்தண்டிகண்டிகை கிராமத்தில் உள்ள உணவுப்பொருள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த உத்தண்டிகண்டிகை கிராமத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது.

    இங்கு குழந்தைகளுக்கான உணவு பொருட்கள், சத்து மாவு உள்ளிட்ட பல்வேறு வகை உணவுப்பொருட்கள் தயார் செய்யப்பட்டு வெளிநாடு மற்றும் பிற மாநில, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு திடீரென தொழிற்சாலை கிடங்கில் இருந்து கரும்புகை வந்தது. இதனை கண்ட காவலாளி தொழிற்சாலை மேலாளருக்கு தகவல் கொடுத்தார். ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. கிடங்கு முழுவதும் தீ பரவி பற்றி எரிந்தது.

    தகவல் அறிந்ததும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய் கண்டிகை, செங்குன்றத்தில் இருந்து 5 வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க போராடினர். தீ விபத்து காரணமாக தொழிற்சாலையில் இருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை மேலே எழுந்தது. மேலும் அப்பகுதியை சுற்றிலும் ஏலக்காய் வாசனை வீசியது.

    விடிய, விடிய போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தொழிற்சாலையில் இருந்த ஏலக்காய், பாதாம், பிஸ்தா, கோதுமை, பார்லி, கம்பு, கேழ்வரகு, சோளம், கடலை, பேரிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. சேதமதிப்பு பல கோடி இருக்கும்.

    மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Tamilnews
    ×