search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollachi cheating"

    பொள்ளாச்சி அருகே நிதி நிறுவனத்தில் ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் பெநசீர் (வயது 27). இவர் கிணாச்சேரியில் உள்ள ஒரு கிளை நிதி நிறுவனத்தில் கடந்த பல ஆண்டுகளாக மேனேஜராக உள்ளார்.

    மார்ச் மாதம் இந்த அலுவலகத்தில் தணிக்கை நடைபெற்றது. இதில் பலருக்கு நகை அடமான கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக ரசீதுகள் இருந்தன. ரசீதுகளின்படி நகை வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை பார்த்தபோது அங்கு நகைகள் இல்லை.

    இதேபோன்று பலருக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுத்துள்ளதாக ஆவணங்கள் இருந்தன. ஆவணங்களில் உள்ளபடி அவர்களது முகவரியை தேடியபோது அப்படி எவரும் இல்லை.

    வாங்காத நகைக்கும், இல்லாத நபர்களுக்கும் ரூ.35 லட்சம் கடன் கொடுத்தது போல் இளம்பெண் மோசடி செய்துள்ளது தணிக்கையில் தெரியவந்தது. தணிக்கை நடந்தபோது மேனேஜர் பெநாசீர் தலைமறைவானார்.

    மோசடி குறித்து அறிந்த நிதி நிறுவன அதிபர்கள் பாலக்காடு டி.எஸ்.பி. சகிக்குமாரிடம் புகார் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று பெநாசீர் அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அங்கு சென்றனர். வீட்டில் வைத்து இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    ×