என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » police training camp
நீங்கள் தேடியது "Police training camp"
நாகையில் போலீசாருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் கலந்து கொண்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார் நிறைவாழ்வு பயிற்சி முகாம் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமை தாங்கி, முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் டி.ஐ.ஜி. லோகநாதன் பேசியதாவது:-
பணி சுமையினால் போலீசார்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட போலீசார் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு புத்துணர்ச்சி பெற வேண்டும். தனது குடும்பத்தினருடன் பரஸ்பர ஒற்றுமையுடன் போலீசார் பழக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் உள்பட போலீசார் கலந்து கொண்டனர். முகாமில் போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X