என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police motorcycle"

    நெய்வேலியில் குற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்து செல்லும் புதிய நடைமுறையை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    நெய்வேலி:

    நெய்வேலியில் குற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்து செல்லும் புதிய நடைமுறையை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். நெய்வேலியில் மோட்டார் சைக்கிளில் போலீசார் ரோந்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பாண்டியன், ரவிந்தர்ராஜ், சந்திரசேகரன், ஏழுமலை, மீனாள் உள்பட காவல் உதவி ஆய்வாளர்கள் ரோந்து போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் 2 பிரிவாகவும் சில போலீஸ் நிலையங்களில் 3 பிரிவாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் 2 போலீஸார் மோட்டார் சைக்கிளில் சுழற்சி முறையில் செல்வார்கள்.

    இதில் எந்த இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார் சைக்கிளில் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு செல்வார்கள்.

    ரோந்து செல்லும் போது சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள இடத்திலும் போலீசார் கையெழுத்திட வேண்டும். எந்த இடங்களில் குற்ற சம்பவங்கள் நடக்கிறது? என்பதை அறிந்து அதற்கான காரணங்களை பொதுமக்களிடம் இருந்து ரோந்து போலீசார் சேகரித்து அதை தடுக்க உயர் அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்து சம்பந்தப்பட்டவர்களை அணுகி உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×