என் மலர்
நீங்கள் தேடியது "pmk road blockage"
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் பா.ம.க.கட்சியின் கொடி கம்பம் இருந்தது. நள்ளிரவில் மர்மமனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த கொடியையும், கயிறையும் கீழே இறக்கினர்.
இதையடுத்து கொடி மற்றும் கயிறை சேதப்படுத்தினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலை இதுபற்றி தகவல் அறிந்த பா.ம.க.வினர் நகர அமைப்பு செயலாளர் பூவராகமூர்த்தி தலைமையில் வக்கீல் அணி செயலாளர் இளையராஜா, நிர்வாகி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் கொடிகம்பம் அருகே திரண்டனர்.
அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட் டம் செய்தனர். கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
ஆனால் பா.ம.க.வினர் சாலைமறியலை கைவிட மறுத்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் அப்புறப்படுத்தி அவர்களை வேனில் ஏற்றினர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






