search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pimms Medical College"

    • அகில இந்திய சமுதாய மருத்துவத்துறை புதுச்சேரி பிரிவு சார்பில் மாநில கருத்தரங்கம் கல்லுாரி அரங்கில் நடந்தது.
    • ஜிப்மர் மனநல மருத் துவர் பாலாஜி போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தொற்றா நோய், அதனால் ஏற்படும் மனநல பிரச்சினை குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    புதுச்சேரி:

    கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் அகில இந்திய சமுதாய மருத்துவத்துறை புதுச்சேரி பிரிவு சார்பில் மாநில கருத்தரங்கம் கல்லுாரி அரங்கில் நடந்தது.

    கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். துறை தலை வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். டெல்லி எக்கோ இந்தியா அமைப்பின் பேராசிரியர் சந்தீப் பல்லா சிறப்புரையாற்றி ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதனை அனில் பூர்த்தி பெற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து இருதய நிபுணர் மார்க் மாரடைப்பு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித் தும், ஜிப்மர் மனநல மருத் துவர் பாலாஜி போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தொற்றா நோய், அதனால் ஏற்படும் மனநல பிரச்சினை குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    காணொலி மூலம் டாட்டா மெமோரியல் மருத்துவ பேராசிரியர் சுபிதா பாட்டீல்,புற்று நோய் ஆரம்ப நிலை குறித்தும் சிகிச்சைக்கான பொது மக்களுக்கு விழிப்புணர்வு குறித்த விபரங்களை கூறி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    கருத்தரங்கில் பிம்ஸ் மருத்துவ சமுதாய டாக்டர் ஸ்டாலின் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலையில் மருத்துவ துறைக்கு அர்ப்பணிப்புடன் மாணவ- மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
    • பேராசிரியர் நாயர்இக்பால் உள்ளிட்ட அனைத்து துறை மருத்துவ பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பிம்ஸ் மருத்துவமனை தலைமை வழிகாட்டி திலீப்மாத்தாய் வரவேற்றார். பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினராக டெல்லி தேசிய காசநோய் மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும் பிரபல காசநோய் மருத்துவ நிபுணருமான டாக்டர் ரோகித் சரீன் கலந்து கொண்டு இளங்கலை மருத்துவ மாணவ- மாணவிகள் 137 பேருக்கும், முதுகலை மருத்துவ மாணவ -மாணவிகள் 35 பேருக்கும் பட்டங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலையில் மருத்துவ துறைக்கு அர்ப்பணிப்புடன் மாணவ- மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 2022ஆண்டின் ஆல்ரவுண்டராக தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவி ராகவலட்சுமி மற்றும் பல்வேறு பாட பிரிவுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர் சுதர்ஷனன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    அதுபோல முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள், மற்றும் சிறந்த மருத்துவ ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் கவுரவிக்கப் பட்டனர்.விழாவில் துணை முதல்வர்கள் டாக்டர் மேகி, டாக்டர் ஸ்டாலின், பேராசிரியர் நாயர்இக்பால் உள்ளிட்ட அனைத்து துறை மருத்துவ பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவ-மாணவிகளின் தனிதிறனை வெளிப்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் ஆரா என்னும் தலைப்பில் நடத்தப்படுகின்றன.
    • புதுவை காவல்துறை ஐ.ஜி. சந்திரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆரா டீசர்ட் அறிமுகம் செய்து வெளியிட்டார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவ-மாணவிகளின் தனிதிறனை வெளிப்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் ஆரா என்னும் தலைப்பில் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டு ஆரா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிம்ஸ் நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.

    மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுவை காவல்துறை ஐ.ஜி. சந்திரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆரா டீசர்ட் அறிமுகம் செய்து வெளியிட்டார்.

    நாள்தோறும் பல்வேறு மருத்துவ கல்லூரி மாணவர்கள் பங்கேற்க்கும் இசை, நடனம், ஓவியம், பேஷன் ஷோ, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதுதவிர மாணவர்களை உற்சாகப்படுத்த பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஜொனிதா காந்தியின் இசை நிகழ்ச்சி. டி.ஜே. நிகழ்ச்சி மெட்ராஸ் மெயில் குழுவின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது‌.

    போட்டிகளில் கலந்து கொள்ள பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் வருகை புரிந்துள்ளதால் பிம்ஸ் மருத்துவ கல்லூரி விழா கோலம் பூண்டுள்ளது.

    • உலக மருத்துவம் சார்ந்த கல்வி வல்லுநர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • பிம்ஸ் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவம் சார்ந்த படிப்பு குறித்த தகவல் கையேடு வெளியிடப்பட்டது.

    புதுச்சேரி:

    உலக மருத்துவம் சார்ந்த கல்வி வல்லுநர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் சிறப்பாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. பிம்ஸ் மருத்துவம் சார்ந்த கல்வி(அலைய்டு ஹெல்த் சயின்ஸ்) கல்லூரி டீன் டாக்டர் அலீஸ் கிஷ்கு வரவேற்றார்.

    பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவம் சார் கல்லூரி முதல்வர் டாக்டர் தீபா பிலிப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பின்னர் பிம்ஸ் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவம் சார்ந்த படிப்பு குறித்த தகவல் கையேடு வெளியிடப்பட்டது.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.. பின்னர் நடந்த, செவிலியர் கல்லூரி மாணவியரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஸ்டாலின், செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, பிம்ஸ் பிஸிதெரபி கல்லூரி முதல்வர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். ‌முடிவில் மருத்துவ சார்ந்த கல்வி தொடர்பான பள்ளி முதல்வர் ஸ்வேதா நன்றி கூறினார்.

    ×