search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petition to Narikaur Tahsildar"

    • நரிக்குறவர்கள் தாசில்தாரிடம் மனு
    • 3 ஆண்டுகளாக அளந்து கொடுக்கவில்லை

    போளூர்:

    போளூரில் 100-க்கு மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வாழ்கின்றன. போளூர் அல்லி நகர் நடேசன் தெருவில் சில குடும்பங்களுக்கும் வசூரில் எம்.ஆர் மில் அருகே சில குடும்பங்களுக்கும் பட்டா வழங்கியுள்ளனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு திருவண்ணாமலை கலெக்டராக இருந்த கந்தசாமி தலைமையில் 29 நரிக்குறவர் குடும்பங்களுக்கு வெண்மணி அருகே இடம் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் 3 வருடங்கள் ஆகியும் இதுவரைக்கும் அந்த இடத்தை அளந்து கொடுக்கவில்லை என்று 29 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் முறையிட்டு மனு அளித்தனர்.

    ஏற்கனவே இந்த 29 குடும்பங்களும் தமிழக முதலமைச்சரிடமும் மாவட்ட கலெக்டர் மனு அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×