search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perundurai rain"

    பெருந்துறையில் 1 மணி நேரம் கொட்டிய மழையால் ரோடுகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஈரோடு:

    வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் வெப்ப சலனம் காரணமாக கடந்த 3 நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது.

    நேற்று 3-வது நாளாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மதியம் வரை வெயில் அடித்தது. மாலை 4 மணிக்கு மேல் மழை கொட்டியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 24 மி.மீட்டர் மழை பெய்தது.

    மாலை 3.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 4.30 மணி வரை 1 மணி நேரம் கொட்டியது. இதனால் ரோடுகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இதேபோல கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதிகளிலும் மிதமாக மழை பெய்தது. ஈரோடு, சென்னிமலை, வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கொடுமுடி -14.8

    வரட்டுப்பள்ளம் அணை -6.8

    ஈரோடு -5.

    ×