search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Personal Loan Fraud"

    • கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்கள் ஏராளம்.
    • மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிகள்.

    வாழ்க்கையில் ஏற்படும் திடீர் தேவைகளை செலவுகளையும் சமாளிப்பதற்கு பலரும் தனிநபர் கடன் வசதிகளையே நாடுகின்றனர். தற்போது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன் பெறும் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற எளிமையான வழியில் மாற்றி அமைத்துள்ளன. அதேசமயம், தனிநபர் கடன் தொடர்பான மோசடிகளும் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. இவற்றால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்கள் ஏராளம். இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

    * கடன் சலுகைகள் குறித்து தொலைபேசி. மின்னஞ்சல்கள் மூலம் உங்களை யாரேனும் தொடர்பு கொண்டால் எச்சரிக்கையாக இருக்கவும்.

    * தனிநபர் கடன் தொடர்பான ஒப்பந்தத்தை கவனமாக படிக்கவும். அதில் உள்ள விதிமுறைகள், வட்டி விகிதங்கள். திருப்பி செலுத்தும் தவணைக்கான அட்டவணை மற்றும் மறைக்கப்பட்ட கட்டணங்கள் (செயலாக்க கட்டணம், ஆவணங்கள் தயாரிப்புக்கான கட்டணம், கடனை முன்கூட்டியே அடைப்பதற்கான கட்டணம், தாமதமான கடன் தவணைக்கான கட்டணம்) என அனைத்தையும் நன்றாகப் படித்து புரிந்து கொண்ட பிறகு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவும்.

    * கடன் கொடுப்பவர்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்காமல், உங்களுக்கு வேண்டிய பணத்தை வழங்க முன்வந்தால் அந்த கடன் சலுகையை பெறாமல் தவிர்ப்பதே நல்லது.

    * உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் செயல்படுவதற்கு முறையான உரிமம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யவும்.

    * தனிநபர் கடன்களில் நேரடியாக அனுபவம் உள்ளவர்களிடம் அது தொடர்பான ஆலோசனைகளை பெறுங்கள்.

    * தனிநபர் கடன் வழங்குபவர்கள், கடன் பெறுதல் தொடர்பாக உங்களை விரைவாக முடிவுகளை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்தால் அவர்களை தவிர்த்து விடுங்கள்.

    * ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள், வங்கிக் கணக்கு எண் அல்லது தனிப்பட்ட அடையாளம் போன்ற முக்கியமான தகவல்களை சட்டப்பூர்வமாக கடன் வழங்கும் நிறுவனத்திடம் மட்டுமே பகிருங்கள்.

    * பெரும்பாலான மோசடிகள் இணையதளம் மூல மாகத்தான் நடைபெறுகிறது. எனவே கடன் தவணையை செலுத்துவதற்கு முன்பு. கடன் வழங்குபவரின் இணையதளம் பாதுகாப்பானதா மற்றும் சரியான தர நிர்ணய சான்றுகளுடன் செயல்படுகிறதா என்பதை விசாரித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

    * கடன் தொகையை வழங்குவதற்கு முன்பு குறிப்பிட்ட ஒரு தொகையை தாங்கள் முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும், அதை தங்களுக்கு அளிக்கும் கடன் தொகையோடு சேர்த்து வழங்குவதாகவும் நிர்பந்திக்கும் நிறுவனங்களை தவிர்ப்பதே நல்லது.

    * இந்தியாவில் இருக்கும் அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களும், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்திருக்க வேண்டும். நீங்கள் கடன் பெறுவதற்கு முன்பு உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    ஏதேனும் மோசடியில் நீங்கள் சிக்கிக் கொண்டதாக தெரிந்தால், அது குறித்து பெடரல் டிரேட் கமிஷன் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும்.

    ×