search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pati Thiruvizha"

    • திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் டிச.31-ந் தேதி திருப்படித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • காலை10 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருவள்ளூர்:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை வீடாக உள்ளது. ஆண்டுக்கு 365 நாட்கள் வருவதை குறிக்கும் வகையில் மலைக்கோயிலுக்கு சென்று வர 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் டிச.31-ந் தேதி திருப்படித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 31-ந்தேதி திருத்தணி கோவிலில் திருப்படிதிருவிழா நடைபெற உள்ளது. அன்று காலை10 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    படித்திருவிழாவில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பஜனை கோஷ்டியினர் காலை முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒவ்வொரு படிகள் தோறும் பக்தி பாடல் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர். பக்தர்கள் அனைத்து படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை செய்வார்கள்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி 31-ந்தேதி நள்ளிரவு தரினம் மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. விழாவையொட்டி மலைக்கோவில், வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் தலைமையில் அறங்காலங்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகன், உஷா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மலைக் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு சரிசெய்யப்பட்டு உள்ளது. இப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. படித்திருவிழாவின் போது மலைக்கோவிலுக்கு அனைத்து வாகனங்ககளையும் அனுமதிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    ×