search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palayam"

    • குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.
    • காளியம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    குத்தாலம் அருகே வழுவூர் கிராமத்தில் தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    தற்போது கோவிலின் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜை, கோவிலின் பரிகார பூஜைகளுடன் கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து பூர்ணாகுதிக்கு பிறகு மேளதாளம் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

    தொடர்ந்து கர்ப்ப கிரகத்தில் அமைந்துள்ள தில்லை காளியம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை வழுவூர் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×