என் மலர்
நீங்கள் தேடியது "Padayappa Elephant"
- மூணாறு காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று அட்டூழியம் செய்து வருகிறது.
- வாட்ஸ் அப் குழுவில் படையப்பா யானை இன்று எங்கே செல்கிறது, அதன் நடமாட்டம் குறித்த தகவல்களை பரிமாறி வருகிறார்கள்.
கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறு காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று அட்டூழியம் செய்து வருகிறது. அடிக்கடி ஊருக்குள் புகுந்து தோட்டங்களை சேதப்படுத்தி தொழிலாளிகளையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் படையப்பா என்று பெயரிட்டுள்ளனர். இந்த யானை பெயரில் அவர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியதோடு, வாட்ஸ் அப் குழு ஒன்றையும் உருவாக்கி உள்ளனர். அந்த குழுவில் படையப்பா யானை இன்று எங்கே செல்கிறது, அதன் நடமாட்டம் குறித்த தகவல்களை பரிமாறி வருகிறார்கள்.






