search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nutrient employees protest"

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    மதுரை:

    மதுரை மாவட்ட தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் முறையான காலமுறை ஊதியம், சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட துணைத் தலைவர் செல்வகுருசாமி தலைமை தாங்கினார். போராட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன் பேசினார், மாவட்டச் செயலாளர் நீதிராஜா, மாவட்டப் பொருளாளர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் பாலாஜி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில பொருளாளர் தமிழ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சோலையன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×