என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "naval palam"
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகரில் சாலையோரங்களில் ரம்புட்டான், நாவல் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்த அந்த ருசியாக உள்ள ரம்புட்டான் பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கேரளா மலைப்பகுதிகளில் ரம்புட்டான் பழங்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளதால், அதன் வரத்து அதிகமாக உள்ளது. 1 கிலோ ரம்புட்டான் பழங்கள் ரூ.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் தற்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் நாவல் பழங்கள் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரம்புட்டான் பழங்களின் சீசன் தொடங்கி விட்டதால், அதன் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ரம்புட்டான், நாவல் பழங்களை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை அமோகமாக இருக்கிறது, என்றார்.
இதேபோல் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழங்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே விற்பனைக்காக அதிகமாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலாப்பழம் விற்பனை செய்யும் வியாபாரி கூறுகையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழங்கள் அதிகமாக விளைச்சலாகி உள்ளது.
இதனால் அங்கிருந்து மொத்தமாக பலாப்பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். 10 கிலோ எடையுள்ள பலாப்பழம் ரூ.150-க்கு விற்கப்படுகிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்