search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycle-Goat Theft"

    • மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்றார்.
    • ஆட்டை மட்டும் காணவில்லை என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் .

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ராஜ்குமார் (வயது 32) இவர் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல் கள்ளக்கு றிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மனைவி சந்திரா (51) இவர் நேற்று தனது வீட்டிற்கு முன்பு 2 ஆடுகளை மேச்சலுக்காக கட்டியி ருந்தார். இதில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் இந்நிலையில் நேற்று மாலை கள்ளக்குறிச்சி போலீசார் நீலமங்கலம் அருகே வாகனத் தணிக்கை ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் ஆடு எடுத்து வந்த வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முன்பு இருந்த மோட்டார் சைக்கிள் திருடி கொண்டு, தென்கீரனூரில் ஆட்டையும் திருடி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    ×