என் மலர்
நீங்கள் தேடியது "Money Deposit Issue"
ரூ.2 லட்சம் வைப்பு தொகை செலுத்தும்படி கூறிய தனியார் பள்ளி நிர்வாகி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். நிர்வாகிக்கு ஆதரவாக ஒரு தரப்பு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #PrivateSchool #Deposit
தாம்பரம்:
சென்னையை அடுத்த குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதிகளில் ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவு பள்ளி உள்ளது. இந்த 2 பள்ளிகளிலும் சேர்த்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு பள்ளி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவ-மாணவிகளும் ரூ.2 லட்சம் வைப்பு தொகை கட்டவேண்டும். பணம் கட்டவிருப்பம் இல்லாதவர்கள் இந்த மாதம் 31-ந் தேதிக்குள் தெரிவித்தால் அடுத்த கல்வி ஆண்டில் மாற்றுசான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 2 பள்ளிகளிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, சேலையூர் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பள்ளி நிர்வாகியும், தாளாளருமான சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படாததால் வைப்பு தொகை செலுத்த வேண்டாம் என பெற்றோரிடம் தெரிவித்த கல்வித்துறை அதிகாரிகள், இது தொடர்பாக பெற்றோர்களின் புகாரையும் பெற்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவ-மாணவிகள் இடையே பேசிய பள்ளி நிர்வாகி, பெற்றோர்கள் குறித்து அவதூறாக பேசியதாக தகவல் பரவியது. இது குறித்து ஒரு தரப்பு பெற்றோர், பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகியிடம் கேட்க ஆலப்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் ஒரு தரப்பு பெற்றோர் குவிந்தனர். அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
இந்தநிலையில் இந்த பிரச்சினைகள் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசில் மாணவர்களின் பெற்றோர் சார்பில் புகார் செய்யப்பட்டது.
அந்த புகார்கள் தொடர்பாக பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் சேலையூர் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பீர்க்கன்காரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 147, 294 பி, 341, 342, 353, 504, 384, 385, 507, 506(1) ஆகிய பிரிவுகள் மற்றும் அதிக கல்விகட்டணம் கேட்டது தொடர்பாக தமிழக பள்ளிகள் கல்வி கட்டணம் வரைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் 2009-ல் பிரிவு 9(1)ன் படியும் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகி சந்தானம் (வயது 73), பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் செல்வக்குமார் (45), கார்த்திகேயன் (53), ராகவன் (69), ரங்கநாதன் (23) ஆகிய 5 பேரை பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் மற்றொரு தரப்பு பெற்றோர்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகிகளை விடுதலை செய்யவேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கத்தில் உள்ள 2 பள்ளி வளாகங்களிலும் பள்ளி நிர்வாகி சந்தானத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், “பள்ளியில் உள்ள பிரச்சினையை எங்களுக்குள் பேசி தீர்த்து கொள்கிறோம். பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிக்கு ஆதரவாக உள்ளோம். சிலரின் தூண்டுதலால் பள்ளிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என மிகச்சிறிய அளவிலான பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி நிர்வாகி சந்தானத்துக்கு ஆதரவாக உள்ளோம்” என்றனர்.
இதற்கிடையில் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். அதன்பிறகு சந்தானம் உள்பட 5 பேரையும் போலீஸ் நிலையத்தில் இருந்து வேனில் ஏற்றி தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த தாம்பரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கார்ல் மார்க்ஸ் கைது செய்யப்பட்ட 5 பேரையும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 8-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சந்தானம், செல்வக்குமார், கார்த்திகேயன், ராகவன் ஆகிய 4 பேரும் புழல் சிறையிலும், ரங்கநாதன் சைதாப்பேட்டை கிளை சிறையிலும் அடைக்க போலீசார் கொண்டு சென்றனர்.
இதற்கிடையே பள்ளி நிர்வாகி சந்தானம் கைது செய்யப்பட்டதால் பள்ளி காலவரை இன்றி மூடப்படும் என பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில், தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பள்ளி தொடர்ந்து செயல்படும் என மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பள்ளி நிர்வாகி சந்தானம் கைது தொடர்பாக பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி நிர்வாகி சந்தானம், 4 நாட்களுக்கு முன்பு கல்வித்துறையின் விதிகளுக்கு மாறாக, தானாகவே ஒவ்வொரு மாணவ-மாணவிக்கும் வைப்பு தொகை கட்ட உத்தரவிட்டு உள்ளார். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, அதிகமாக கேட்பது தவறு.
இது குறித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு கேட்டபோது, பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சந்தானம், விருப்பம் உள்ளவர்கள் பள்ளியில் படிக்கலாம். இல்லாதவர்கள் மாற்றுசான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம் என கூறி உள்ளார்.
நேற்று காலை மாணவர்களுடன் வந்த பெற்றோரை, சந்தானம் பள்ளியின் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு பள்ளியின் சுற்றுசுவருக்கு வெளியே வைத்து தகாத வார்த்தையால் பேசி, மிரட்டி விரட்டினர். அதையடுத்து, பெற்றோர்கள் பீர்க்கன்காரணை போலீசில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை நடந்தது. அதில், அவர் அதிகபட்ச கட்டணம் கேட்டதை ஒப்புக்கொண்டார். இனிமேல் அதிகப்படியான பள்ளி கட்டணத் தொகையை கட்டதேவையில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து பள்ளியை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நாளை முதல் வழக்கம் போல் பள்ளி இயங்கும். பள்ளியின் முதல்வர், பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வராது. வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #PrivateSchool #Deposit
சென்னையை அடுத்த குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதிகளில் ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவு பள்ளி உள்ளது. இந்த 2 பள்ளிகளிலும் சேர்த்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு பள்ளி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவ-மாணவிகளும் ரூ.2 லட்சம் வைப்பு தொகை கட்டவேண்டும். பணம் கட்டவிருப்பம் இல்லாதவர்கள் இந்த மாதம் 31-ந் தேதிக்குள் தெரிவித்தால் அடுத்த கல்வி ஆண்டில் மாற்றுசான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 2 பள்ளிகளிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, சேலையூர் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பள்ளி நிர்வாகியும், தாளாளருமான சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படாததால் வைப்பு தொகை செலுத்த வேண்டாம் என பெற்றோரிடம் தெரிவித்த கல்வித்துறை அதிகாரிகள், இது தொடர்பாக பெற்றோர்களின் புகாரையும் பெற்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மாணவ-மாணவிகள் இடையே பேசிய பள்ளி நிர்வாகி, பெற்றோர்கள் குறித்து அவதூறாக பேசியதாக தகவல் பரவியது. இது குறித்து ஒரு தரப்பு பெற்றோர், பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகியிடம் கேட்க ஆலப்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் ஒரு தரப்பு பெற்றோர் குவிந்தனர். அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
இந்தநிலையில் இந்த பிரச்சினைகள் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசில் மாணவர்களின் பெற்றோர் சார்பில் புகார் செய்யப்பட்டது.
அந்த புகார்கள் தொடர்பாக பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் சேலையூர் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பீர்க்கன்காரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 147, 294 பி, 341, 342, 353, 504, 384, 385, 507, 506(1) ஆகிய பிரிவுகள் மற்றும் அதிக கல்விகட்டணம் கேட்டது தொடர்பாக தமிழக பள்ளிகள் கல்வி கட்டணம் வரைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் 2009-ல் பிரிவு 9(1)ன் படியும் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகி சந்தானம் (வயது 73), பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் செல்வக்குமார் (45), கார்த்திகேயன் (53), ராகவன் (69), ரங்கநாதன் (23) ஆகிய 5 பேரை பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் மற்றொரு தரப்பு பெற்றோர்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகிகளை விடுதலை செய்யவேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கத்தில் உள்ள 2 பள்ளி வளாகங்களிலும் பள்ளி நிர்வாகி சந்தானத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், “பள்ளியில் உள்ள பிரச்சினையை எங்களுக்குள் பேசி தீர்த்து கொள்கிறோம். பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிக்கு ஆதரவாக உள்ளோம். சிலரின் தூண்டுதலால் பள்ளிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என மிகச்சிறிய அளவிலான பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி நிர்வாகி சந்தானத்துக்கு ஆதரவாக உள்ளோம்” என்றனர்.
இதற்கிடையில் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். அதன்பிறகு சந்தானம் உள்பட 5 பேரையும் போலீஸ் நிலையத்தில் இருந்து வேனில் ஏற்றி தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த தாம்பரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கார்ல் மார்க்ஸ் கைது செய்யப்பட்ட 5 பேரையும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 8-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சந்தானம், செல்வக்குமார், கார்த்திகேயன், ராகவன் ஆகிய 4 பேரும் புழல் சிறையிலும், ரங்கநாதன் சைதாப்பேட்டை கிளை சிறையிலும் அடைக்க போலீசார் கொண்டு சென்றனர்.
இதற்கிடையே பள்ளி நிர்வாகி சந்தானம் கைது செய்யப்பட்டதால் பள்ளி காலவரை இன்றி மூடப்படும் என பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில், தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பள்ளி தொடர்ந்து செயல்படும் என மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பள்ளி நிர்வாகி சந்தானம் கைது தொடர்பாக பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி நிர்வாகி சந்தானம், 4 நாட்களுக்கு முன்பு கல்வித்துறையின் விதிகளுக்கு மாறாக, தானாகவே ஒவ்வொரு மாணவ-மாணவிக்கும் வைப்பு தொகை கட்ட உத்தரவிட்டு உள்ளார். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, அதிகமாக கேட்பது தவறு.
இது குறித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு கேட்டபோது, பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சந்தானம், விருப்பம் உள்ளவர்கள் பள்ளியில் படிக்கலாம். இல்லாதவர்கள் மாற்றுசான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம் என கூறி உள்ளார்.
நேற்று காலை மாணவர்களுடன் வந்த பெற்றோரை, சந்தானம் பள்ளியின் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு பள்ளியின் சுற்றுசுவருக்கு வெளியே வைத்து தகாத வார்த்தையால் பேசி, மிரட்டி விரட்டினர். அதையடுத்து, பெற்றோர்கள் பீர்க்கன்காரணை போலீசில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை நடந்தது. அதில், அவர் அதிகபட்ச கட்டணம் கேட்டதை ஒப்புக்கொண்டார். இனிமேல் அதிகப்படியான பள்ளி கட்டணத் தொகையை கட்டதேவையில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து பள்ளியை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நாளை முதல் வழக்கம் போல் பள்ளி இயங்கும். பள்ளியின் முதல்வர், பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வராது. வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #PrivateSchool #Deposit






