என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Chandrapriyanka"

    சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி புதிய பஸ்கள் வாங்குவதற்கு துரித நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பி.ஆர்.டி.சி .தொழிலாளர் முன்னேற்றச் சங்க செயலாளர் ராஜேந்திரன், தலைவர் திருக்குமரன், அய்யப்பன், ஐ.என்.டி.யு.சி குமரவேல், ஓட்டுநர், நடத்துநர் சங்கத் தலைவர் இளங்கோ மற்றும் ஊழியர்களுடன் அமைச்சர் சந்திரபிரியங்காவை சந்தித்து பேசினார்.

    அப்போது, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும், 15 வருடம் ஓடிய பழைய பஸ்கள் 22 நிறுத்தப்பட்டதற்கு பதில் மாற்றுப் பஸ்களை வாங்கி இயக்க வேண்டும்,

    கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி புதிய பஸ்கள் வாங்குவதற்கு துரித நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    புதிய வழித்தடங்களில் அரசு பஸ்களை இயக்க வேண்டும், மாதம்தோறும் ஊதியம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 2 மாத சம்பளத்தை வழங்க வேண்டும்.

    பல வருடமாக வழங்கப்படாமல் உள்ள 46 சதவீதம் டி.ஏவை வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழிய ர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டிய எம்.ஏ.சி.பி.ஐ காலதா மதமின்றி விசாரணை இருப்பின் விரைவாக நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டன.

     கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் சந்திரபிரயங்க இன்னும் 15 நாட்களுக்குள் பேட்டரி பஸ்கள் வாங்கப்படும் என்றும் 50 புதிய பஸ்கள் ஒரு மாதத்தில் வாங்கி, புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் ஊழியர்களின் சம்பளம் பிரதி மாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற கோரிக்கைகள் அரசின் கவனத்தில் உள்ளது எனவும் அவைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

    • பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது நூலக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
    • கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் கவிஞர் வாணிதாசன் 109-வது பிறந்தநாள் விழா சேலியமேட்டில் கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி சேலியமேடு பகுதியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் ரூ. 17 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த நூலகத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சந்திர பிரியங்கா, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    இந்த நூலகத்தில் சிறப்பு அம்சங்களான அரவிந்தர் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கான புதிய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    சிறுவர்களுக்கான புத்தகத் தனிப்பிரிவு, வேலை வாய்ப்புக்கான தனிப்பிரிவு, செய்தித்தாளுக்கு தனிப்பிரிவு என்ன பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது நூலக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் கண்காணிப்பாளர் அருள்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை கலை பண்பாட்டு துறை நூலகப் பிரிவு திருமாறன் செய்திருந்தார். பின்னர் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் கவிஞர் வாணிதாசன் 109-வது பிறந்தநாள் விழா சேலியமேட்டில் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அவரது நினைவிடத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

    • அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்
    • ஒரு வருட கால போட்டித்தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளுக்கான பயிற்சியினை அளித்து வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னருக்கான தேசிய வாழ்வாதார மையம் தனியார் பயிற்சி நிறுவனம் வாயிலாக ரூ.1000-ம் மாத உதவித் தொகையுடன் கூடிய ஒரு வருட கால போட்டித்தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளுக்கான பயிற்சி யினை அளித்து வருகிறது.

    இந்த ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகளை போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுக்கு இலவச போட்டித்தேர்வு பயிற்சி நூல்களை வழங்கி வாழ்த்தினார்.

    விழாவில் உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன், மைய ஒருங்கி ணைப்பாளர் கோட்டூர்சாமி, குளோபல் பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்க டேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×