search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maruthu Pandiyar"

    மருதுபாண்டியர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கலெக்டர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.
    சிவகங்கை:

    மருதுபாண்டியர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கலெக்டர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர முழக்கமிட்டதுடன், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள் மருது பாண்டியர். மருதுபாண்டியரின் மணிமண்டபம் திருப்பத்தூரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 24-ந்தேதி மருதுபாண்டியர் நினைவு தினம் குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அரசு சார்பில் குருபூஜை விழா நடைபெற உள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது.

    மருது பாண்டியர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் பாதுகாப்புடன் மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று(நேற்று) முதல் வருகிற 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடவோ, பேசவோ கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    மருதுபாண்டியர்கள் நினைவுதினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
    திருப்பத்தூர்:

    சுதந்திர போராட்டத்தின் போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மன்னர்கள் சின்ன மருது, பெரிய மருது ஆகியோர் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்து வந்தனர். மருதுபாண்டியர்களின் மணிமண்டபம் திருப்பத்தூரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந்தேதி மருதுபாண்டியர்கள் நினைவு தினம் குருபூஜை விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது.

    திருப்பத்தூரில் உள்ள மணி மண்டபத்தில் அரசு சார்பில் நாளை(புதன்கிழமை) அரசு விழா நடைபெற உள்ளது. இதேபோல் வருகிற 27-ந் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதையடுத்து திருப்பத்தூரில் நடைபெற உள்ள விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பார்வையி ட்டு ஆய்வு செய்தார். மணிமண்டபத்தில் மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்களிடம் விழா குறித்து கேட்டறிந்தார். இதுதவிர விழாவின்போது போக்குவரத்து வழித் தடங்கள், பாதுகாப்புப் பணிகள், பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கான நேரம் ஒதுக்கீடு குறித்து கேட்டறிந்தார்.

    தென் மண்டல ஐ.ஜி. ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, செயல் அலுவலர் முருகன், தி ருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர்கள் பொன்ரகு, கீதா மற்றும் துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, வருவாய் ஆய்வாளர் பழனிக் குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியர் வாரிசுதாரர் குழுத் தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து திரு ப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் அவரது நினைவு ஸ்தூபியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ×