search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maruthi nagar police station"

    • தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'கொன்றால் பாவம்'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படத்தை தயாள் பத்மநாபன் இயக்கி தயாரித்துள்ளார்.

    இதில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

     

    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்


    இது குறித்து இப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன் கூறியதாவது, "அடிப்படையில், நான் ஹனுமானின் தீவிரமான பக்தர் மற்றும் அவரது இருப்பை உள்ளடக்கிய சில தலைப்புகளை என்னுடைய படங்களுக்கு வைக்க விரும்பினேன். இந்தப்படம் பல சாதக பாதகங்களைக் கொண்ட காவல் நிலையத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களைக் கதையாகக் கொண்டது.


    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

    உண்மையான ஸ்டேஷன் பெயர்கள் மற்றும் பகுதிகளை நாங்கள் இதில் படமாக்க விரும்பவில்லை. அதனால், 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று கற்பனையான பெயரைக் கொண்டு வர முடிவு செய்தோம். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது". இவ்வாறு அவர் கூறினார்.


    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

    வரலக்ஷ்மி சரத்குமார் & ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நான்-லீனியர் பாணியில் புதிய பரிமாணத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

    ×