என் மலர்
நீங்கள் தேடியது "Management accounts"
தரங்கம்பாடியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் 70 வருவாய் கிராமங்களுக்கான நிர்வாக கணக்குகள் முடித்த தொடர்பான ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தரங்கம்பாடி தாலுக்காவில் 70 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் நிர்வாக கணக்குகள் முடித்தல் தொடர்பான ஜமாபந்தி நிகழ்ச்சியானது கடந்த 17 ஆம் தேதியில் இருந்து 26 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 70 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை தொடர்பாக மனு அளித்துள்ளனர்.
ஜமாபந்தி நிகழ்ச்சியானது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு நாளில் பயனாளிகளுக்கு முதியோர், விதவை உதவித்தொகை, 16 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும் வழங்கி பேசினார். 427 நபர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை தொடர்புடைய துறைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்பட பரிசீலனையில் உள்ளது என ஜமாபந்தி அலுவலர் தெரிவித்தார்.
இதில் வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இந்துமதி, நில எடுப்பு தனி வட்டாட்சியர் சுந்தரி, வட்ட வழங்கல் அலுவலர் பாபு, தலைமை நில அளவர் சங்கர், மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் விஜயராணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் பிரகாஷ், சௌந்தரவள்ளி, கவிதா, சசிகலா, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






