search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madurai hotel adultery"

    ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் மீட்டனர். 5 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை பொன்மேனி பை-பாஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் விபசாரம் நடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் ஓட்டலுக்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது விபசாரத்தில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் ஆத்தூரைச் சேர்ந்த தாமோதரன் மனைவி கவிதா (வயது43), இடுக்கி ஸ்ரீஜா (35), நாமக்கல் மாவட்டம் மோகனூர் பிரியா (21), மதுரை அண்ணாநகர் ஆறுமுகம் மகள் சுதா (23) ஆகிய 4 பேரை போலீசார் மீட்டனர்.

    மேலும் அங்கிருந்த புரோக்கர்களான நெல்லை மாவட்டம் டி.ராமநாதபுரத்தைச் சேர்ந்த அருள்செல்வம் மனைவி மங்கையர்கரசி (37), காளிராஜ் (22), குமரி மாவட்டம் சத்திரங்காடு பாபு (27), பரமக்குடி மருதுபாண்டியன் நகர் ரவிசங்கர் (43), மதுரை கீழவாசல் லட்சுமிபுரம் மங்காராம் (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.57 ஆயிரத்து 700, 13 செல்போன்கள், ஒரு பண மாற்றக்கருவி (ஸ்வைப் மிஷின்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×