என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Madha temple festival"
- கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு (எண்.06003) ரெயில் விடப்பட்டுள்ளது.
- இதே போல் தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை:
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு (எண்.06003) ரெயில் விடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு கட்டண ரெயில் தாம்பத்தில் இருந்து 28-ந் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு அதிகாலை 4.30 மணிக்கு போய் சேருகிறது.
இதே போல் வேளாங்கண்ணியில் இருந்து 29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்.06004) அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதே போல் தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாளை (19-ந் தேதி) மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் 20-ந் தேதி காலை 8 மணிக்கு சென்றடையும். 20-ந் தேதி கொச்சு வேலியில் புறப்பட்டு 21-ந் தேதி தாம்பரம் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்