என் மலர்

    நீங்கள் தேடியது "lay the road"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூங்காவின் ஒரு பகுதி சுற்றுச்சுவரை யாரோ சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணலை கொட்டி வைத்திருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • அனுமதி இன்றி சிலர் பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள சுவரை உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணல்களை கொட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட முருகேசன் நகரில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ரூ.44 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.

    இந்த பூங்காவை அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பூங்காவின் ஒரு பகுதி சுற்றுச்சுவரை யாரோ சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணலை கொட்டி வைத்திருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்பொழுது அனுமதி இன்றி சிலர் பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள சுவரை உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணல்களை கொட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.

    மாநகராட்சி அதிகாரிகள் வந்ததும் அந்த பகுதி மக்கள் சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் அதிமுக வீரப்பன் சத்திரம் பகுதி செயலாளர் கேசவமூர்த்தி,வார்டு செயலாளர் செல்வராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.

    அவர்கள் பூங்கா சுவரை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,

    பூங்காவின் சுற்று சுவரை அனுமதியின்றி சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக அங்கு குழிகள் தோண்டி மணலை நிரப்பியுள்ளனர்.

    இது சம்பந்தமாக மாநகராட்சி சார்பில் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்.

    ×